Monday 18 July 2011

ரூ.250 கோடி வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் சபை


இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.250 கோடி வரி செலுத்தியுள்ளதாக அதன் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.


இதன் மூலம், அரசுக்கு அதிக வரி செலுத்தும், விளையாட்டு அமைப்புக்களில், இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ஒழுங்ட்கு செய்த கூட்டத்தின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது ஐ.பி.எல், டுவெண்டி 20 போட்டிகள் மூலம் கணிசமான வருவாயை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் சபை, ஸ்பான்சர், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் காமர்ஷியல் விளம்பரங்கள் என்பவற்றின் மூலமும் லாபமடைந்து வருகிறது. இம்முறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment