Saturday, 25 June 2011

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகும் ஹீனா ரப்பானி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய வெளியறவு துறை அமைச்சராக ஹீனா ரப்பானி கர் (34) நியமிக்கப்படவுள்ளார்.


பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அப்போது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த ஷா மொகமத் குரேஷி நீக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

மீனவர்களின் வழிகாட்டியாகும் ஜி.பி.எஸ். கருவி

ஜூன் 24: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு துணையாக ஜிபிஎஸ் (Global Positioning System) எனப்படும் உலக இடநிர்ணயிப்புக் கருவி விளங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகுகளில் இத்தகைய கருவிகள் இருந்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியவில்லை. அக்கருவிகளைக் கையாள்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிக்க வேண்டும் : சபாநாயகருக்கு ஆ. ராசா கடிதம்

பாராளுமன்ற எம்.பி.க்களில் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, மதுகோடா, கனிமொழி ஆகிய 4 பேர் டெல்லி திகார் ஜெயிலில் உள்ளனர். ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகவும், சுரேஷ் கல்மாடி காமல் வெல்த் போட்டி ஊழல் தொடர்பாகவும் மதுகோடா முறைகேடான சொத்து குவிப்பு காரணமாகவும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21% அதிகரிப்பு

மும்பை : 2010ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.


இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

50 பைசா நாணயங்கள் செல்லாது

இந்தியாவில் வரும் 29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது.


இது குறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 47 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை: சென்னை நகரில் இன்று ஒரே நேரத்தில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்டார். மாநில உளவுப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார்.

இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை

Muthupet PFI -- JUNE 25,
டார் எஸ் சலாம்: இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் துனிஷியா இணைந்தது

இந்த ஆண்டு துவக்கத்தில் அரபு போராட்டங்கள் ஏற்பட்ட பகுதியாக துனிஷியா இருந்தது. இந்த நாடு சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இணைந்தது.


இந்த அமைப்பில் இணைந்த முதல் வட ஆப்பிரிக்க தேசம் துனிஷியா ஆகும். சர்வதேச கிரிமினல் கோர்ட் விதிமுறைகளை ஏற்கும் என துனிஷியா வெள்ளிக்கிழமை ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிமினல் கோர்ட் மற்றும் ஐ.நா பொதுச் செயலாளரிடம் உரிய விவரங்களை சமர்ப்பித்தது.

SDPI ன் மரக்கன்று நடுவிழா

Muthupet PFI -- June 25,
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 3-ஆம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் - திருவல்லைக்கேனி தொகுதியின் சார்பாக மக்கள் நலம் நாடு மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா...


கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

ஈராக்கில் அதிவேக ரயில்: பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் அமைக்கிறது

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து பஸ்ரா வரை அதிவேக ரயில் இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் மேற்கொள்கிறது.


இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக அல்ஸ்டோம் மற்றும் ஈராக் ரயில்வே இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பாரிஸ் சர்வதேச விமான கண்காட்சியில் போக்குவரத்து துறை இளநிலை அமைச்சர் தெரிவித்தார்.

சிரியாவில் அதிபருக்கு எதிராக கடும் போராட்டம்: 15 பேர் சுட்டுக் கொலை

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கினர்.


இது குறித்து சிரியா அரசு தொலைக்காட்சி கூறுகையில்,"அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலால் உயிரிழப்பு ஏற்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.

பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.


திண்டுக்கல் மாவட்டம் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விருது

சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு முடிவு

Muthupet PFI -- JUNE 25,
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்டின் சுதந்திர தின அணிவகுப்பினை திருநெல்வேலியில் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சிறப்புவாய்ந்த மனநல நிபுணர் பணிகள்-25-06-2011

மனநலம் குன்றிய நிலை என்பது, மூளை சேதமடைவதாலோ, பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகளாலோ ஒரு மனிதருக்கு ஏற்படும் குறைபாடாகும். இதன்மூலம் மூளையின் சிந்தனை மற்றும் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், மிகுந்த சிரமத்துடனேயே எதையும் கற்றுக்கொள்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளைவிட தாமதமாகவே அமரவோ, தவழவோஇ நடக்கவோ மற்றும் பேசவோ செய்கிறார்கள்.


4,800 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் விமானம் தயார்!

பாரீஸ் : அதிபயங்கர வேகத்தில் பறக்கும் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன.


ஹாலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் விமானங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் ஹைலைட்டாக இடம் பிடித்திருப்பது இஏடிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேக்4’ எனப்படும் ஹைப்பர்சானிக் விமானம்.

இஷ்ரத் ஜஹான் வழக்கு:பதவி விலக அனுமதிக்கவேண்டும்-எஸ்.ஐ.டி தலைவர்

அஹ்மதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தலைவர் சத்யபால் சிங் பதவி விலக அனுமதியளிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.ஐ.டியின் இதர உறுப்பினர்களான மோகன் ஜா, சதீஷ் வர்மா ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் தன்னை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என சத்யபால் சிங் நீதிபதிகளான ஜெயந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கும் பெஞ்சின் முன்பாக சமர்ப்பித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான்:நிலநடுக்க சேதம் ரூ.10 லட்சம் கோடி

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் மிகக் கடுமையான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.

பொது மருந்துகளால் முதியவர்களுக்கு உயிரிழப்பு அபாயம்: ஆய்வுத் தகவல்

ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்களுக்கு பழக்கமான பொது மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.


அலர்ஜி, வலி நிவாரணி மற்றும் ரத்த ஓட்டத்தை இழக்கச் செய்தல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

சென்னையில் ஒரு சதுர கி.மீ.க்கு 26,903 பேர் வசிக்கும் அவலம்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 121 கோடி மக்கள் தொகை இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 389 பேர் உள்ளனர். 10 ஆண்டுகளில் 97 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.6 சதவீதம். தமிழகத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 555 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

 ஜூன் 24:  நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உள்துறை அமைச்சக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!

Muthupet PFI -- JUNE 25,
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.


இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

மத்திய உள்துறைச் செயலராக ராஜ்குமார் சிங் நியமனம்

புது தில்லி, ஜூன் 24: மத்திய உள்துறைச் செயலராக ராஜ்குமார் சிங் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டார்.


மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: முதல்வர் ஆய்வு

இலவச கறவை பசு -ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா  உடன் அமைச்சர்கள்

சென்னை, ஜூன் 24: இலவசமாக பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.


Friday, 24 June 2011

பிலிப்பின்ஸ் நாட்டில் வெள்ளம்: 50,000 பேர் இடமாற்றம்

மணிலா- பிலிப்பின்ஸ் நாட்டில் கடும் மழை, வெள்ளம் காரணமாக 50 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கேடன்டுவான்ஸ் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்தது எப்படி?

கோவை: தமிழக போலீசில் பணியாற்றும் உயரதிகாரிகளில் சிலர், வருமானத்துக்கும் அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளை, பினாமி பெயரில் வாங்கிப் போட்டிருப்பதாக அரசுக்கு புகார் சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து ரகசியமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.


ஆப்கனில் இருந்து வீரர்களை திரும்ப அழைக்க பிரான்ஸ் முடிவு

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் ராணுவ வீரர்கள‌ை வாபஸ் பெறப்போவதாக அந்நாட்டு அதிபர் நேற்று தெரிவித்தார்.


ஆப்கனில் நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் ‌என அதிபர் ஒபாமா அறிவித்தார்.

கர்நாடகா:ஹன்ஸூர் மாணவர்கள் படுகொலையில் கெ.எஃப்.டியை தொடர்பு படுத்தும் மர்மம்-சங்க்பரிவாரின் சதிச்செயல்

மைசூர்:கர்நாடகா மாநிலம் ஹன்ஸூரில் பணத்திற்காக இரண்டு மாணவர்கள் கடத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கலைக்கப்பட்ட கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி (கே.எஃப்.டி) அமைப்பை தொடர்புபடுத்துவதில் மர்மம் நீடிக்கிறது.



ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து!

"பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து, தொழில் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வட்டியை இனிமேல் அரசே செலுத்தும்" என மத்திய அரசு அறிவித்துள்ளது.


தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வங்கிக் கடன் பெற்ற ஏழை மாணவர்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2009-10 கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"அனைத்து வழிகளிலும் பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் உள்ள, பொருளாதார நிலையில் நலிவுற்ற மாணவர்களுக்காக 2009-10 கல்வி ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்கும் நலிவடைந்த மாணவர்கள், ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் வட்டியை அரசே செலுத்தும்.

இதற்காக, மாநில அரசின் உரிய அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட, வட்ட, யூனியன் அளவிலான அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வட்டி ரத்து சலுகையைப் பெற கல்விக் கடன் பெற்ற வங்கிக் கிளையின் அதிகாரிகளை மாணவர்கள் அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

இந்தத் திட்டத்தை அமல் படுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள உறுப்பு வங்கிகள் அனைத்தும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்தச் சலுகை திட்டம் தொடர்பான இதர விபரங்களை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இணைய தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். சட்டப்படி உரிய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழுடன் விண்ணப்பித்ததும் கல்விக் கடனுக்கான வட்டித் தொகை வரவு வைக்கப்படும்.

இதற்கான, விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக் கிளைகளில் அளிப்பதற்கான கடைசித் தேதி ஜுலை 20 ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பயப்படாது! அஹ்மது நிஜாத்

தெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கு பயப்படவில்லை ஆனால் அப்படி செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார் வியாழக்கிழமையன்று அரசு தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டது


இணையதளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி

சி.ஐ.ஏ அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களில் ஊடுறுவிய குற்றத்துக்காக 19 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் றீட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.

மரணத்தை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்: கடாபி

நூறாண்டுகள் ஆனாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து சண்டையிடுவோம். சாவுக்கு அஞ்ச மாட்டோம் என லிபியா தலைவர் கடாபி தெரிவித்துள்ளார்.


லிபியாவில் அதிபர் கடாபியை பதவி விலகக்கோரி அதிருப்தியாளர்கள் நேட்டோ படைகளின் உதவியுடன் போராடி வருகின்றனர்.

Thursday, 23 June 2011

டி.சி.எஸ். நிறுவனத்தில் 31,500 பேர் வெளியேறினர்

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில், சென்ற 2010 11 ஆம் நிதி ஆண்டில் நிகர அடிப்படையில் 38,185 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

அந்த நிதி ஆண்டில், இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக மொத்தம் 69,685 பொறியியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதேசமயம், 31,500 பேர் வேலையை விட்டு விலகியதால், நிகர வேலைவாய்ப்பு 38,185 ஆக உள்ளது.

மக்கள் மீது நேட்டோ தாக்குதல்: ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி

Muthupet PFI -- 23/June/2011
லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ராணுவத்தை ஒடுக்க நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டு படைகள் தாக்குதலில் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள்.

தலைநகர் திரிபோலியில் நேட்டோ சமீபத்தில் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பெரும் சேதம் அடைந்ததுடன் உயிர் சேதமும் ஏற்பட்டது.

2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமா

Muthupet PFI -- 23/June/2011
ஆப்கானிஸ்தானில் இருந்து 2012ம் ஆண்டு கோடைகாலத்திற்கு முன்பாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொ‌றி‌யி‌ய‌ல் ரேங்க் பட்டியல் நாளை வெளி‌யீடு

பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான ரே‌ங்‌க் ப‌ட்டி‌யலை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம் நாளை வெ‌ளி‌யிட உ‌ள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 494 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிக‌ளி‌ல் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு வருடந்தோறும் அண்ணா பல்கலைக்கழகம் கல‌ந்தா‌ய்வு நடத்தி வருகிறது.

3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி

சென்னை, ஜூன் 22: தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.


உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பென்டகன் புதிய தலைவர் லியோன் பனெட்டா

அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் புதிய தலைவராக லியோன் பனெட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ-வின் தலைவர் பதவியை வகித்த இவரது நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

3 வருட கியாரண்டியுடன் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்-அரசு திட்டம்

சென்னை:  3 வருட உத்தரவாதத்துடன், தரமான லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழிலதிபர் மற்றும் ரத்னாகருக்கு சம்மன்!!

புட்டபர்த்தி: சாய்பாபாவின் தனி அறையிலிருந்த பல கோடி ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த நகைகள் ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பாபா அறக்கட்டளை உறுப்பினர்களே துணைபோயுள்ளனர்.



பாபாவின் பக்தர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்த சத்யசாய்பாபா கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து லாரி மூலம் விலை உயர்ந்த பரிசுபொருட்கள் மற்றும் பணம் கடத்திச் செல்லப்பட்டதாக பக்தர்கள் புகார் கூறினார்கள். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

லோக்பால் மசோதா தொடர்பாக ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லி: லோக்பால் மசோதா குறித்து ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள வரைவு மசோதா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து நீதி விசாரணை-அரசு உத்தரவு

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பான விசாரணை அறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

லிபியாவின் 9 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

Muthupet PFI -- 23/June/2011
லிபிய அதிபர் மோமர் கடாபியின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
விதித்துள்ளது.

லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார்.

மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்

கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி.


1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.

Wednesday, 22 June 2011

2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு

ஐ.நா.: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், உலக அளவில் கடும் சர்ச்சைக்குள்ளானவரான பான் கி மூன்.

இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.

துருக்கி - இஸ்லாமிய அரசியலை நோக்கி

தேர்தல் அரசியலில் பங்கேற்று இஸ்லாமிய அரசியலை நோக்கிய பயணத்திற்கான ஒரு நிகழ்கால உதாரணத்தைத் தருகிறேன்.


துருக்கி! நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் இஸ்லாமிய உலகின் தலைநகராக இருந்த நாடு. பின்னர் முஸ்தபா கமால் பாட்சா என்பவன் தலைமையில் அந்நாடு வந்தபின், இஸ்லாமிய அடையாளம் முழுமையாக அகற்றப்பட்டு, யூரோப்பிய நாகரீகத்தின்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ஜூலை 30ம் தேதி நடைபெறும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

மொத்தம் 4,329 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.