Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 16 July 2011

இன்றே உழைப்போம் வாருங்கள்.....

கிலாபத்வீழ்த்தப்பட்டது,
தாங்க முடியாத சோகத்தால்
இதயம் நிறைந்தது.

Thursday, 9 June 2011

விழித்துக்கொள், வேலை வந்துவிட்டது !!!


இதயமுள்ளவனே...!!!!!!!
எட்டிப்பார்
எட்டுத்திசையும் எம் சமுதாயம்
சர்வதேசத்தின் சதிவலையில் சள்ளடையாகிறது......!
ஜாஹிளியத்துக்கு
ஜால்ரா அடிக்கும்
ஜாதியாய் போனதால்
காலை முதல்
கருக்கள் வரை
துன்பத்தில்
தேய்ந்து வருகிறது ......!
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

Wednesday, 1 June 2011

மீண்டும் எழுச்சி!!!


கலீபா எங்கே என்றார்…
பழங்கதை எதற்கு என்றோம்!

தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!

இறை நேசர்களை
சிறைக்குள் அடைத்தோம்!

பொது எதிரியை
இமயமாய் வளர்த்தோம்!

தூய தியாகிகளை
தூக்கிலே போட்டோம்!

வீர வரலாற்றை
வீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!

Saturday, 28 May 2011

பெண்ணே ! உனக்காய் சில வரிகள்...

  • உன் உள்ளத்தின் வலிகள்தான் நாளைய சுவனத்தில் சுபசோபனமாகும்.
  •  உன் விழிகள் அவனுக்காய் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்றால்நீயும் நாளைய பொழுதில் அர்ஷின் நிழலைப் பெற்ற அதிஷ்டசாலிதான்.
  • அல்லாஹ்வுக்காக என்று நீ ஆசை வைத்துப்பார்,அவன் ஒருபோதும் உன்னை கைவிடாமல் உன் ஆசைகளை சுவனத்தில் நிலைத்திடச் செய்வான்.
  • உன்னில் இப்போதெல்லாம் மறுமையை இலக்காய் கொண்ட சந்தோஷம் வாழுமென்றால்... நீ உண்மையில் இறைநேசமுள்ளவள்தான்.