Thursday, 28 July 2011

நில மோசடிப் புகார்‌ : விரை‌வி‌ல் கைதா‌கிறா‌ர் கே.எ‌ன்.நேரு


தி.மு.க. முன்னாளஅமைச்சரே.என்.நேரமீது நிமோசடிபபுகார் இன்றபதிவசெய்யப்பட்டதை‌த் தொட‌‌ர்‌ந்து ‌விரை‌வி‌ல் கைதாவா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

திருச்சி காவ‌ல்துறை‌யின‌ர் ஆணைய‌ர் அலுவலகத்துக்கவந்திருச்சி பொன்மலைப்பட்டியைசசேர்ந்ஒய்.சாலமனதேவராஜஎன்பவர், ே.என்.நேரு, திரு‌ச்‌சி மாநகராட‌்‌சி துணமேயர், ி.ு.நகரசசெயலாளராஅன்பழகனஆகியோரமீது‌ம் காவ‌ல்துறை‌யி‌ல் இ‌ன்று புகா‌ர் அ‌ளி‌த்தா‌ர்.

லோக்பால் மசோதா: பிரதமருக்கு விலக்கு-ஊழல் செய்து 7 ஆண்டுகளாகி விட்டால் விசாரணை கிடையாது மக்களை ஏமாற்றும் மசோதா!

டெல்லி : அன்னா ஹஸாரே உள்ளிட்டோரின் பரிந்துரைகளை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு லோக்பால் மசோதாவை மாற்றியமைத்து விட்டது. பிரதமர், நீதித்துறைக்கு மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான்!

நிலப்பறிப்பு : மாநிலத்தில் இம்மோசடி குறித்து, குவிந்துவரும் புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் காவல்துறையில் தனிப்பிரிவை, அரசு ஏற்படுத்தும் அளவுக்கு சூடுபிடித்துள்ள விவகாரம். 

இதுவரை, 2,400 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 196 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அரசியல்வாதிகள் தொடங்கி, அதிகாரிகள், கிரிமினல்கள் வரை நீளும் புகார்கள் காவல்துறையினரையே மிரளவைத்துள்ளன. 

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

ஆளுக்கொரு நீதி அதுதான் இன்றைய உலக நியதி !!

பலஸ்தீன் என்ற சுதந்திர நாடு உருவாவதற்கு அமெரிக்கா ஐ.நா. பொதுச் சபையில் ஆதரவு அளிக்கப்போவதில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதேவேளை  மேற்குலகின் ஆயுதமான கிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒரு சனிக்கிழமை அன்று சூடானில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட  தெற்கு சூடான் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் ஆசீர்வாதத்துடன் “வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மகிழ்ச்சியானதும்” என பொதுச் சபையின் தலைவர் யோசப் டீஸ் வழிமொழிய வாக்கெடுப்பு எவ்வித எதிர்ப்பும் இன்றி வெற்றிபெற “நல்வரவு, நாடுகளின் கூட்டமைப்புக்கு தெற்கு சூடானை வரவேற்கிறோம்,” என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் வாழ்த்துரைக்க ஐநாவின் 193வது உறுப்பு நாடாக அங்கீகாரம் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக!

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

நார்வேயில் கைது செய்யப்பட்ட ஆண்டேர்ஸ் மூலம் உலக பயங்கரவாத தொடர்புடைய ஹிந்துத்துவா!

புதுடெல்லி :  நார்வேயில்  இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

வரம்பு மீறல்கள்! அ.இ.அ தி.மு.க அரசு என்ன செய்யப்போகிறது பொறுத்திருந்து பார்போம்

வரம்புமீறிய, அனுமதியில்லாத கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இடிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் அவசரச் சட்டம் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. 
 
முந்தைய திமுக ஆட்சியில், தொடர்ந்து நான்காவது முறையாக, ஜூலை 27, 2010-ல் அமல்படுத்தப்பட்ட இந்த அவசரச் சட்டம் முடிவுக்கு வந்துவிட்டதால், அனைவர் மனதிலும் எழும் அடுத்த கேள்வி, "சட்டவிதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் எழுப்பப்பட்ட இந்த வரம்பு மீறிய கட்டடங்கள் இனிமேலாவது இடிக்கப்படுமா' என்பதுதான்.
 

சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கிய எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு- நாளை புதிய முதல்வர் தேர்வு

பெங்களூர் : கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு கூடுதல் டிஜிபி ஜாபரின் வீட்டில் கிடைத்த சிடி-க்கள் : வெளிச்சத்திற்கு வருமா சில உண்மைகள்

சென்னை : முன்னாள் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் வீட்டில் நடத்திய ரெய்டில் பல ஆடியோ சிடிக்கள் சிக்கியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனவாம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து வந்த சேட், அவரது பேச்சையே ஒட்டுக் கேட்டு டேப் செய்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கந்தஹாரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் நகர மேயர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இன்று  நடைபெற்ற  தற்கொலைத் தாக்குதலில், அந் நகர மேயர்  பிதா குலாம் ஹயிதர் ஹமீத்  கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மக்கள் குறைகேட்கும் நிகழ்வொன்றில் இவர் கலந்து கொண்டிருந்த போதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும்,

பிரிட்டன் : கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்தமைக்கு லிபியா கண்டனம்

லிபிய போராட்டக்காரர்கள் ஒரே அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள் என பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு லிபியா கடாபி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடாபியின் நிர்வாகத்தில் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள காலித் காலிம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல். பிரிட்டன் முடிவை நீதிமன்றம் மூலம் மாற்றுவேன்" என்றார்.

குங்ஃபு வாலிபால் பார்த்திருக்கிறீர்களா? – வீடியோ

சிறிய பந்து, வெறும் கால்கள், மார்பு மற்றும் தலையை மாத்திரம் உபயோகிக்க முடியும் கைகளால் விளையாட முடியாது.
இதுதான் Sepak Takraw என்ற விளையாட்டின் சட்டம். எப்படி விளையாடுவது?
உலகின் மிக கடினமான விளையாட்டாக இது  இருக்குமோ என வர்ணிக்கிறது
thepostgame.com