Saturday, 16 July 2011

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேஷியாவில் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் லோகன் என்ற எரிமலை உள்ளது.

1580 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பே புகை கிளம்பியது.  எனவே அது வெடிக்கும் அபாயம் இருந்ததால் கடந்த மாதம் (ஜூன்) 9-ந் தேதியில் இருந்தே அப்பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர்.

மும்பை குண்டு வெடிப்பு SDPI கடும் கண்டனம்!


புதுடெல்லி: மும்பையில் கடந்த புதன்கிழமை மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Thursday, 14 July 2011

பிரதீப்குமார் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு

புதுதில்லி : முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலர் பிரதீப்குமார் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இன்று (ஜுலை 14)  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ரம்ஜான் நோன்பு கஞ்சி: பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி- ஜெ உத்தரவு Connect with

சென்னை: ரம்ஜான் நோன்பு திறப்புக்காக கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3,801 டன் அரிசி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஆந்திராவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நலத்திட்ட உதவிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஏழை எளிய மக்களுக்கும், காய்கறி மற்றும் பழம் வியாபாரிகளுக்கும் நான்கு சக்கர தள்ளு வண்டியை இலவசமாக விநியோகம் செய்துள்ளது. சுய தொழில் தொடங்குவதற்கு உதவியாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டது. நெல்லூர், கர்னூல், யெமிஞ்சூர், அதோனி மற்றும் நன்டியால் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டது.

எகிப்து கலவரம் : 700 போலிஸ் உயரதிகாரிகள் அதிரடி நீக்கம்

எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 போலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி

பெங்களூர் : ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

புதிய மாநில அலுவலகம் திறப்பு விழா

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் சென்னை மண்ணடியில் 12-07-2011 அன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

மாநிலத்தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Wednesday, 13 July 2011

பேஸ்புக்கில் App ஐ பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்கும் முறை

பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான அப்பிளிகேஷன்கள் குவிந்து கிடக்கின்றன.
இவற்றில் சில உங்களின் உண்மையான மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம்.

அவற்றை தவிர்ப்பதற்கு கீழ்வரும் முறையை பயன்படுத்தலாம்.

சவுதி அரேபியா : இந்திய தூதருக்கு அந்நாட்டு மன்னர் விருது

ரியாத் : சவூதி அரேபிய நாட்டிற்க்கான இந்திய தூதருக்கு அந்நாட்டின் உயரிய கவுர விருது நேற்று (ஜுலை 12) வழங்கப்பட்டுள்ளது.

இந்திய-சவூதி அரேபிய நாடுகளிடையே நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த அந்நாட்டிற்கான இந்திய தூதர் தல்மிஸ் அகமதுவுக்கு , சவூதி மன்னரின் உயரிய விருதும், சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டன.

ரேஷன் கார்டில் காஸ் இணைப்பு பதிவு ரத்து

காஸ் இணைப்பு உள்ளவர்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஸ் இணைப்பு உள்ளவர்கள் மண்ணெண்ணெய் முறைகேடாக பெறுவதை தடுக்கும் வகையில் ரேஷன் கார்டில் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

"யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்கு எந்த மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்'

மும்பை, ஜூலை 12: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பதில் அளிக்கலாம். இதை மும்பை நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உறுதி செய்துள்ளது. 

தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை : தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலருக்கு பதவி உயர்வும், இடமாறுதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: (முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ஹைதராபாத்:  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா:பகவத் கீதையை கற்றுக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மடத்திற்கு 40 கோடி ரூபாய்

பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள சிர்ஸியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மடத்திற்கு பா.ஜ.க அரசு இவ்வளவு பெரிய தொகையை அனுமதித்துள்ளது. 

மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின இடத்தை கைப்பற்றும் பார்ப்பன கும்பல்

டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப் பட்ட இடங்களை பாதியளவுக்குக்கூட நிரப்பாமல், பொதுப் போட்டிக்குக் கொண்டு போகும் ‘பார்ப்பன கொள்ளை’ நடைபெற்று வருகிறது.

செல்போன் : காதலில் சீரழியும் இளைஞர்கள்


பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். 

மஹாராஷ்ட்ரா:ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்த நவீன பிச்சைக்காரர்கள் 43 பேர் கைது

அவுரங்காபாத்:உலகம் நவீனமயமாகும்போது நாங்கள் என்ன மோசமானவர்களா? என கேள்வி எழுப்பும் விதமாக ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து பிச்சை எடுத்த 43 இளம்பெண்கள் மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் நகரில் கைதுச்செய்யப்பட்டனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு:ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை : தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் : தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சமச்சீர் கல்வித்திட்டம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, சமச்சீர் கல்வி திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எடுத்த முயற்சிக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

லிபிய அதிபர் கடாபி பதவி விலகுகிறார்: பிரான்ஸ் அமைச்சர் தகவல்

லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதமாக போராட்டம் நடைபெறுகிறது. அங்கு பெங்காசியை மையாக கொண்ட போராட்டக்காரர்களின் தாக்குதலும் தீவிரமாகி உள்ளது.

வந்தே மாதரமும் ஹிந்துத்துவா ஒரு பார்வை!

மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முஸ்லிம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில்  பார்ப்பன மேல் சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். 

கென்யாவில் வறட்சி அகதிகள் முகாமில் தவிக்கும் மக்கள்

கென்யாவில் உள்ள தாதாப்பில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ள முகாமுக்கு நேற்று தண்ணீர் லாறி வந்தது. இந்த தண்ணீர் லாறியை பார்த்ததும் முகாமில் பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு புன்னகை எட்டிபார்த்தது.

Tuesday, 12 July 2011

ஆப்கான் அதிபரின் சகோதரர், மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை

ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் இளைய சகோதரர் அஹமது வாலி கர்சாய் அவரது மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் குஜராத் கட்சிகள்

ஆமதாபாத் : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டன.

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பஸ் மறியல்

முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக வழக்கமாக திறந்து விடும் தண்ணீர் திறந்து விடவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசாத் நகர் நிஜாம் தீன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். 

உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?

உலகில் அதிம மக்களால் பேசப்படும் மொழிகள் எவை என புதிய புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.  7 பில்லியனை கடந்து நிற்கும் இன்றைய சனத்தொகையில் 80% வீதமான மக்கள் பேசுபவை வெறும் 83 மொழிகள் தான்.  ஆனால் 0.2% வீதமான மக்கள் 3500 மொழிகள் பேசுகிறார்கள்.  இவற்றை இறந்து வரும் மொழிகள் என கூறுகிறார்கள்.

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,

ஜிமெயிலின் புதிய தோற்றத்தை பெறுவது எப்படி?

AddThis Social Bookmark Button
வேகம் குறைந்த கணினி மற்றும் இணைய இணைப்பை கொண்டவர்களும் வேகமாக ஜிமெயிலை
திறப்பதற்கு ஏற்ற வகையில் கூகிள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்கென ஒரு ஜிமெயில் தீமை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

ரஷ்யாவை அண்மித்த தடாஸ்டான் நாட்டின் வொல்கா ஆற்றில் சுற்றுலா படகொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கியதில், அதில்  பயணம் செய்தோரில் 129 பேர் நீரில் முழ்கி பலியாகினர்.

செல்போன் , டிவிடி, சிடி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி 14.5 வீதம் உயர்வு

கடந்த கால ஆட்சியில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக அரசுக்கு கடன் உள்ளதால் அரசுக்கு வருமானம் வரும் வகையில்

டிவிடிக்கள், சிடி, செல்போன் உ‌ள்‌‌ளி‌ட்ட பொரு‌ட்களு‌க்கு 4 வீதத்திலிருந்த வரி தற்போது 14.5 வீதமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய மத்திய அமைச்சரவை விபரங்கள்!

மத்திய அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை மாற்றி அமைக்கப்படுவதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மாலை ஐந்து மணியளவில் பதவியேற்கவுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள விபரங்கள் :

சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: உச்சநீதிமன்றம்


புதுதில்லி : அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்று சத்துணவு வளர்ச்சி கழகம் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பேன்!

புனே: எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான எனது தாக்குதல் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் தனக்கு எதிரான நிந்தனைகளுக்கு பதிலளிக்கையில் பதிலளித்தார் அவர்.

மாட்டை வைத்து கட்சி நடத்தும் பாரதிய ஜனதா!

பாரதிய ஜனதா கட்சி நடிகை ஹேமமாலினியை கண்டித்து தஞ்சையில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் தமிழர் வீர விளையாட்டு பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சூடான்: எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரம் எங்களுடையதே ஒமர் அல் பஷீர்

சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் எண்ணெய் வளமிக்க அப்யாய் நகரத்தின் மீது அத்துமீறி தெற்கு சூடான் அதிகாரம் காட்டக் கூடாது என சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் எச்சரித்துள்ளார்.



Monday, 11 July 2011

‘பெல்’ நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

ராணிப்பேட்டை ‘பெல்’ நிறுவனத்தில், உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) ராணிப்பேட்டை தொழிலகத்தில் ஐடிஐ, தொழிற்கல்வி(வொகேஷனல்) பட்டயப் படிப்பு (டிப்ளமோ இன்ஜினியரிங்) மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.,) கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து கணினி வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இறைத்தூதர்கள் ஏன்?

ஓரிறையின் நற்பெயரால்...

ஒருவன் கடவுளை மறுப்பதாலோ, ஏற்பதாலோ கடவுளுக்கு எந்த ஒரு நன்மையும்,தீமையும் விளைவதில்லை. மாறாக நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு ஏற்றவாறு நமக்கே பயன்களும்,தீமைகளும் வந்தடைகின்றன. அதை யாராக இருந்தாலும் கண்கூடாக நடைமுறையில் காண்கிறோம்.ஆக கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

கூட்டுக் களவாணிகள்

கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என்று அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஆளாளுக்கு ஒவ்வொரு தொகையைச் சொல்கிறார்கள், இந்தத் தொகை அவர்களுக்கு எந்தக் கணக்கீடு மூலம் கிடைத்ததோ என்கிற வியப்பையும் தெரிவித்தார். 

நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே


அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர சகோதரிகளே!!!

அகிலங்களை படைத்தவனுக்கே எல்லாப்புகளும் ....

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

வயிற்று நோயும், தேனின் பயனும்

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....


வைட்டமின் என்றால் என்ன?

மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

பாகிஸ்தானுக்கு 80 கோடி டாலர் நிதியுதவி: அமெரிக்கா நிறுத்தியது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ உதவிகள் நிறுத்தபப்ட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகி்ஸ்தான், இதனால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ளது.

ஏனைய செய்தி ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 100 பயணிகள் பலி

ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது. அந்த படகில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர். அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் உலக புகழ்பெற்ற வோல்கா ஏரியில் இரட்டை அடுக்கு கொண்ட சுற்றுலா படகு நேற்று கவிழ்ந்தது. அந்த படகில் மொத்தம் 180 பயணிகள் இருந்தனர். கடுமையான புயல் காற்று வீசியதில் அந்த படகு தண்ணீரில் தடுமாறி கவிழ்ந்தது.

தமிழக திட்டக்கமிசன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மாநில திட்டக்கமிசன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாநில திட்டக்கமிசன் செயல்படுகிறது.

வருடந்தோறும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டுக்கு முன்பு இந்த குழு முடிவு செய்யும். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

உலக வரைபடத்தில் 193 ஆவது நாடாக மலர்ந்தது தென் சூடான்

தென் சூடான் உலகின் புதிய நாடாக நேற்று சனிக்கிழமை மலர்ந்துள்ளது. கார்ட்டோம் நிர்வாகத்தின் கீழிலிருந்த தென் சூடான் 20 இலட்சம் உயிர்களை காவுகொண்ட கொடூர குற்றம் தசாப்தங்களாக தொடர்ந்த நிலையில் இப்போது புதிய தேசமாக உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறது.

கொங்கோவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வட கிழக்குப் பகுதியில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.112 பேருடன் பயணித்த இவ் விமானம் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிசாங்கனி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது கடந்த வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.


முஸ்லிம் பெண்கள் நிகாபை கழற்றாவிட்டால் ஓர் ஆண்டு சிறை-ஆஸ்திரேலியாவில் சட்டம்

சிட்னி:முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும் அடிப்படையில் நிகாப் என்ற முகத்தை மறைக்கும் ஆடையை அணிவதை தடை செய்ய ஆஸ்திரேலியா சட்டம் கொண்டுவருகிறது.

லஞ்சமா? உடனே 9840983832 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!

சென்னை, ஜூலை .10-லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கல்கா மெயில் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு

பதேபூர் :  கல்கா மெயில் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் கான்பூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது.