பாகிஸ்தானின் வர்த்தக தலைநகராக கருதப்படும் கராச்சி நகரில் கடந்த சில மாதங்களாகவே கலவரம் நடைபெற்று வருகிறது.
அரசியல் மற்றும் இன அடிப்படையிலான வேறுபாடுகளால் கலவரம் மூண்டு வருகிறது. வியாழக்கிழமை நடந்த கலவரத்தில் 11 பேர் பலியாயினர். இதுவரை 18 பேரை காணவில்லை என புகார்கள் வந்துள்ளன.
இதனால் கோபமடைந்த முத்தாகிதா குவாமி இயக்கத்தினர் சிந்து மாகாண முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டனர். கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கலவரக்காரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இஸ்லாமாபாத்தில் அதிகாரிகளின் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த வருடம் மட்டும் கராச்சியில் நடைபெற்றக் கலவரங்களில் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment