
இதனால் அந்த 17 பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தது.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கானின் குடும்பத்துக்கு ரத்தப்பணமாக (நஷ்ட ஈடாக) ரூ.8 கோடி கொடுக்க 17 பேரும் சம்மதித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் விடுதலை ஆகிறார்கள்.
ரத்தப்பணம் கொடுக்கும் தகவலை குற்றவாளிகள் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை கோர்ட்டு ஏற்றுக் கொண்டு வருகிற 27-ந் தேதி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க இருக்கிறது.
No comments:
Post a Comment