உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகையில், செம்மறியாட்டு மந்தைகளின் மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள நிலப்பிரதேசம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்குமுகமாக ஏலவே பல கட்டுப்பாடுகளை ஆக்கிரமிப்பு இராணுவம் விதித்திருந்தது என்பதைச் சட்டிக்காட்டினர்.
இப்பிரதேசம் இதமான காலநிலையோடு தாராளமான நீர்வளம் கொண்டதாகவும் உள்ளது. விவசாயத்துக்கு ஏற்றதும் பச்சைப் பசேலென்ற புல்வெளிகளைக் கொண்டதுமான இந்நிலப்பரப்பு துபாஸ், தமூன் எனும் பிராந்திய விவசாயிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாய் இருந்துவந்துள்ளது. இக்காரணங்களே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையை அப்பகுதியை நோக்கி ஈர்த்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இப்பிரதேசம் ஒரு மூடிய இராணுவ வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் பலஸ்தீனர்கள் நடமாடவோ நிலங்களைப் பயன்படுத்தவோ தடைவிதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஏப்ரல் 2010 இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பொதுமக்களிடையே அறிவிப்புப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment