Saturday, 18 May 2013

கேரளாவில் 21 அப்பாவி முஸ்லிம்கள் கைது சம்பவம்! - போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது! - மனித உரிமை அமைப்பு அறிக்கை!


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் வெடிக்குண்டுகளுடன் ஆயுதப் பயிற்சில் செய்ததாக கூறி 21 பேரை கைது செய்த சம்பவம் போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்று உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பேரா.மார்க்ஸ், புதுவை ஜி.சுகுமாரன் ஆகியோர் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு இந்த விசாரணையை நடத்தியுள்ளது. 

Friday, 17 May 2013

விசாரணை கைதிகளின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தேசிய அளவிலான பிரச்சாரம்!


சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களை பயன்படுத்தி தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்கள், பழங்குடியினர், மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்யக் கோரி தேசிய அளவில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோரிக்கை!


பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு பாஜகவின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல் என்றும் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, 15 May 2013

மாவீரன் ஹைதர் அலி மற்றும் தீரன் திப்பு சுல்தானிற்கு மணிமண்டபம்! பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வாசித்த அறிக்கையில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பு செய்தார். 

மாவீரன் ஹைதர் அலி, திப்புசுல்தானுக்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம்! : ஜெயலலிதா!


முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் அரும்பணியை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. 

சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு : பிஜேபி தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!


புது டெல்லி: குஜராத்தில் கொல்லப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் பிஜேபி மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

படகு கவிழ்ந்ததில் பலர் பலியாகினர்: மியான்மரில் கொடூர சம்பவம்!


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மகாசேன் புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கன மழையும் பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

இனக்கலவர வழக்கு: முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் முடிவு நிறுத்தம்! - "நரபலி நாயகன்" அரசு அறிவிப்பு!


குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து திட்டமிட்டபடி கலவரத்தை அரங்கேற்றினர். இதில், நரோடா பாட்டியா சம்பவத்தில் 96 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது. 

பெங்களூர் குண்டுவெடிப்பு! கோவையை குறிவைக்கும் காவல்துறை!


பெங்களூரு மல்லேஸ்வரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்பது பேர் தமிழக போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பெங்களூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tuesday, 14 May 2013

பதவி ஏற்பு விழாவுக்கு மன்மோகன் சிங் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்! : நவாஸ் ஷெரிப்!


பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரிப் பிரதமர் பதவி ஏற்கிறார்.இந்நிலையில் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று கூறியதாவது:

அறிவில்லாமல் வெளியுறவு கொள்கை குறித்து பேசுவதா?: மோடி மீது குர்ஷித் காட்டம்!


சூரத்: "தமக்கு சம்பந்தப்படாத விசயங்களில் போதிய அறிவில்லாமல் மோடி பேசக்கூடாது" இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியைக் காட்டமாக விமர்சித்து பேசியுள்ளார். குஜராத் மாநில 53-வது ஆண்டு தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள குஜராத் மக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மோடி பேசும்போது, "சீனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை, 120 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டது" என்று விமர்சனம் செய்திருந்தார்.

3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை!



தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. 

கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா?



கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 35 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கட்சி தொடங்கிய 17 ஆண்டுகளில் இம்ரான்கான் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.

Monday, 13 May 2013

முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்!

கல்வித் துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் மும்பையில் வருகிற 29, 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார். ‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு சார்பில் கல்வித்துறையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த 2 நாட்கள் பொதுக்கூட்டம் மும்பை கலினா பகுதியில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் வருகிற 29 மற்றும் 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரிஃப்!


பாகிஸ்தான் தேர்தலில், நவாஸ் ஷெரிஃப்பின் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்ற 272 தொகுதிகளில் 235 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நவாஸ் ஷெரிஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மொத்தம் 137 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், நவாஸ் ஷெரிஃப் கட்சி, சிறிய கட்சிகளி்ன் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ருவைதா சலாம்: ஜம்மு -கஷ்மீரின் முதல் பெண் ஐஏஎஸ்!!


ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருந்து முதன்முறையாக பெண் ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது காஷ்மீர் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் சித்தராமையா!


ர்நாடக மாநிலத்தின் 22வது முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். ஸ்ரீ கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அந்த மாநில ஆளுநர் பரத்வாஜ், சித்தராமையவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு! சிம்கார்டு ஆதாரத்தை மறைக்க முயற்சி?


பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம்  தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, 11 May 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு : அப்பாவி இளைஞர்கள் கைதுக்கு எதிராக திரண்ட சமுதாயம்! மிரண்ட ஆட்சியாளர்கள்!!


பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு ஆர்எஸ்எஸ் தலைவருடையது!

Bangalore-Blast
பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் செல்போன் சிம்கார்டு ரிமோட் கன்ட்ரோலாக பயன்படுத்ததப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும் குண்டுவெடிப்புக்கு முதல் நாள், அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் செல்போன் திருடு போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source: Thoothuonline.com

Thursday, 14 June 2012

தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்டின் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

தஞ்சாவூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பள்ளி விடுமுறை கழிந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் காலகட்டங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் தங்களது கல்வியை தொடரவும், புதியதாக பள்ளியில் சேர்க்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் "ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.



Friday, 9 December 2011

பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை அன்றாடம் நடத்த ராய்பரேலி விசாரணை நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.