Saturday, 11 June 2011

தல்ஃபித் கிராமத்தில் 8 பலஸ்தீனர்கள் கைது

கடந்த வெள்ளிக்கிழமை (10.06.2011) அதிகாலை மேற்குக்கரை தல்ஃபித் கிராமத்தில் எட்டு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



அதிகாலை நேரத்தில் மேற்படி கிராமத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அவற்றைத் தலைகீழாகப் புரட்டி அட்டகாசம் செய்ததோடு, பெண்களையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். அவர்களின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை ஆட்சேபித்த பலஸ்தீனர்களை ஆக்கிரமிப்புப் படை கைதுசெய்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கடாபி படைகள், மிஸுராட்டாவில் தாக்குதல் : 31 பொதுமக்கள் பலி .

லிபியாவின் மிஸுராட்டா நகரில் கடாபி இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பீரங்கிகள், ஆட்டிலெறி, ராக்கெட் எறிகணைகளை கொண்டு மிஸ்ரூட்டாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது கடாபி இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 61 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் ...


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகை
க்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

ஊழல் பீதியினால் சொத்து விவரங்களை வெளியிட குஜராத் அமைச்சர்கள் தயக்கம்


ஊழல் குறித்த நாடுதழுவிய விழிப்புணர்வை முன்வைத்து காங்கிரஸுக்கு எதிராக காய்நகர்த்தி வரும் பாஜகவுக்கு ஆப்புவைக்க காங்கிரஸ் குஜராத் முதல்வர் ந்ரேந்திர மோடியின் அமைச்சர்களைக் குறிவைத்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் ஜூன் மாத இறுதிக்குள் குஜராத் அமைச்சர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துக்கள், அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்கள் பற்றி விவரங்களை தர வேண்டும் என மாநில முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

எனினும் முதல்வரின் உத்தரவினை நிறைவேற்ற முடியாத நிலையில் அமைச்சர்கள் சிலர் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பாபா ராம்தேவ் ஹிமாலாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப்பார்க்க அரசியல்வாதிகளும் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வருவதால் அந்த மருத்துமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நோயாளர்களை சந்திக்க வரும் உறவினர்களை மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்காததால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். நோயாளர்களை நலம் விசாரிக்க வரும் உறவினர்களும் நண்பர்களும் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் (Know இஸ்லாம்) இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் கருத்தரங்கம் !!!


சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை காரணம் அல்ல என்றும், சில பார்ப்பனர்களின் முயற்சிதான் காரணம் என்றும் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

நோயுற்ற கைதியை விடுவிக்க செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை


கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் மகனை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் இருந்து விடுவித்துத் தருமாறு கோரி, தமூன் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஸாலிம் பனீ உதேஹின் தாயார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
தன்னுடைய மகனின் உடல்நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து நேருமாயின், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்காத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகமே அதனைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் அப் பெண்மணி தெரிவித்துள்ளார்.

கொகா கோலா ரகசியம் மக்களே உஷார்! உஷார் !!




உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.

மஸ்ஜிதுல் அக்ஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய போலீஸ்


ஜெருசலம்:மஸ்ஜிதுல் அக்ஸாவில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேலிய போலீஸ் அடாவடித்தனமாக கண்ணீர் புகை போன்றவற்றை பயன்படுத்தி விரட்டியடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கியதை தொடர்ந்து புனித இடத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களுடன் மோதல் ஏற்பட்டதாக இஸ்ரேலிய போலீஸின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

இச்சம்பவத்தில் அநியாயமாக 3 பலஸ்தீன் முஸ்லிம்களை இஸ்ரேலிய போலீஸ் கைது செய்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மூத்த ஹமாஸ் தலைவர் வாஸ்பி கபா உள்ளிட்ட எட்டு பலஸ்தீனர்களை கடத்தி சென்றுள்ளதாக பலஸ்தீன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அரசில் கபா சிறைக்கைதிகள் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இஸ்ரேலிய சிறையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010 வரை அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குறைந்த பட்சம் 11 ஹமாஸ் அரசியலாளர்களை கைது செய்திருந்தது.

இந்தியாவில் அடக்கஸ்தலம்:ஹுஸைன் குடும்பம் நிராகரிப்பு


புதுடெல்லி:எம்.எஃப் ஹுஸைனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரலாம் என மத்திய அரசு அளித்த வாக்குறுதியை அவரது குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலால் இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசித்துவந்த எம்.எஃப்.ஹுஸைனுக்கு கையாலாகாத மத்திய அரசு அவரது பாதுகாப்பிற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கேவலமாக விமர்சித்து புத்தகம் எழுதிய பங்களாதேஷின் தஸ்லீமா நஸ்ரினுக்கு புகலிடம் அளித்தது.

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு 2011-12 ஆண்டுக்கான கல்வி உதவி!


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.
பள்ளி படிப்பு 
தகுதி : 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி தடைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு - அதிமுக ஆட்சிக்கு விழுந்த முதல் அடி

கல்வியாளர்களும் அரசியல் கட்சிகளும் முந்தைய தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதிலும் பிடிவாதமாக சமச்சீர் கல்வியயை நடப்புக் கல்வியாண்டில் ரத்து செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15 ஆம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.

பாசத்தை கொடுக்கும் பெற்றோர்கள் எய்ட்சை கொடுத்து சாதனை!

கொல்கத்தா : இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்தே அவர்களுக்கு பரவியுள்ளது என்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் மற்றும் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டியின் கருத்தரங்கு, மேற்குவங்காளம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது.

இதில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள

Friday, 10 June 2011

சிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர். 

அறிவை இஸ்லாமிய மயமாக்கல்.....


“உலக நோக்கு” என்ற இச்சொற்றொடர் பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனித வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய கண்ணோட்டத்தையே குறிக்கின்றது. இக்கண்ணோட்டமே ஒரு குறிப்பிட்ட உலக நோக்கில் பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் மேற்கத்திய அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வியல் கோட்பாடுகள் அனைத்தும் மேற்கத்திய உலக நோக்கின் அடிப்படையிலேயே உருவாகின. இந்த உலக நோக்கு தோற்றம்பெற்ற ஐரோப்பிய வரலாற்றுச் சூழலை இங்கு நாம் விளங்குதல் அவசியமாகும்.

இலவச கலர் டிவி திட்டம் ரத்து-மீதமுள்ள டிவிகள் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்-ஜெ.


சென்னை: தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது அரசின் வசம் மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் கலர் டிவி பெட்டிகளையும் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளித்துப் பேசினார்.

வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு: டோக்கியோ முதலிடம்

சர்வதேச அளவில் சரக்கு மற்றும் சேவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை ஆகியன அடிப்படையில் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் குறித்து ஈ.சி.ஏ என்ற சர்வதேச அமைப்பு உலகளவில் ஆய்வு ஒன்றினை நடத்தியது.
அந்த ஆய்வின் அடிப்படையில் அதிக செலவு மிக்க முதல் பத்து நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆசியாவின் சிங்கப்பூர் கடந்த ஒரு ஆண்டுகளில் 68வது இடத்திலிருந்து 38 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது ஜப்பானின் ஹாங்காங் நகரினை காட்டிலும் 5 சதவீதம் அதிகம். ஈ.சி.ஏ என்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள முதல் 10 நகரங்கள் பட்டியல் பின்வருமாறு: 1. டோக்கியோ, 2. நெளகோயா, 3. யாகோமா, 4. கூபோ, 5. சீயோல், 6. சிங்கப்பூர், 7. ஹாங்காங், 8. பீய்ஜிங், 9. ஷாங்கை, 10. பூசான் ஆகும்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் தாய்நாட்டில் ஆறடி நிலம் கிடைக்காத எம்.எஃப்.ஹுஸைன்


புதுடெல்லி:பிறந்த மண்ணில் கால்பதிக்கவேண்டும் என்ற ஆசையை மீதம் வைத்துவிட்டு இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச்செய்த ஓவியர் வர்ணங்களின் உலகிலிருந்து பிரியா விடை பெற்றார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளான எம்.எஃப்.ஹுஸைனுக்கு தாய்நாட்டில் திரும்பிவரவேண்டும் என்ற ஆசை இறுதியில் நிறைவேறாமல் போனது.

ஹிந்து தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என குற்றம் சாட்டி ஹிந்துத்துவா சக்திகள் ஹுஸைனுக்கு எதிராக திரும்பினர்.

தனது ஓவியங்களை கலை உருவாக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இந்த கலைஞரின் வார்த்தைகளுக்கு ஹிந்துத்துவா சக்திகள் மதிப்பளிக்கவில்லை.

கோயில்களின் சுவர்களில் ஹிந்து தெய்வங்களின்(?) உருவங்களை நிர்வாணமாக வரைந்து வைத்திருப்பவர்கள்தாம் ஹுஸைன் வரைந்த ஓவியங்களுக்கு எதிராக படை திரட்டினர். கொலை மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலம் அவர்கள் எம்.எஃப்.ஹுஸைனை நிரந்தரமாக வேட்டையாடினர்.

ராம்தேவ் வெளியிட்ட அரைகுறையான சொத்து விபரங்கள்


ஹரித்துவார்:முற்றும் துறந்த சன்னியாசியாக 9-வது வகுப்பில் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி ஆன்மீகத்தின் பெயரால் கோடிகணக்கான சொத்துக்களை திரட்டிய ராம்தேவ் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்திவருபவர்.

இந்நிலையில் அவருடைய சொத்துக்கள் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் சொத்துக்களை குறித்த விபரங்களை வெளியிடுவேன் என அவர் அறிவித்திருந்தார். நேற்று ஹரித்துவாரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனக்கு 1100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நான்கு அறக்கட்டளைகளுக்கு 426.19 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் அவற்றின் மீது 751 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் மேலும் மேலும் வலுக்கிறது


ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

Thursday, 9 June 2011

விழித்துக்கொள், வேலை வந்துவிட்டது !!!


இதயமுள்ளவனே...!!!!!!!
எட்டிப்பார்
எட்டுத்திசையும் எம் சமுதாயம்
சர்வதேசத்தின் சதிவலையில் சள்ளடையாகிறது......!
ஜாஹிளியத்துக்கு
ஜால்ரா அடிக்கும்
ஜாதியாய் போனதால்
காலை முதல்
கருக்கள் வரை
துன்பத்தில்
தேய்ந்து வருகிறது ......!
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்....


பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம‎னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமி‎ன்றி அனுபவிக்கலாம்.  அல்குர் ஆ‎ன்:4-4
    பிற மதங்களில் இ‏றைவைன [‏இறைவனி‎ன் பொருத்தத்தை] அடைதலை முத்தி நிலை எ‎ன்கிறார்கள். இதனை அடைய ஆசைகளை துறத்தல் ேவண்டும். இல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பி‎ன்பே ஆண்டவனை அடைய முடியும் என்கிறார்கள்.

இசைப்பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை....


இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார் துபையைச் சேர்ந்த செவிப்புலனாய்வாளர் ஒருவர். டாக்டர் ஏ.வி.ரேஷா துபையில் உள்ள மெட்கேர்
என்ற மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் செவி மற்றும் கேட்கும் திறனை ஆய்வு செய்யும் ஆய்வாளர் ( audiologist).
தற்போது எம்பி 3 மூலமாக பாட்டு கேட்பது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பிளேயரில் சிறிதளவு சத்தத்துடன் தொடர்ந்து கேட்டாலும் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்துள்ளதாக டாக்டர் ரேஷா தெரிவித்துள்ளார். சத்தத்தின் அளவை டெசிபல் என்று குறிப்பிடுகின்றனர். 90 டெசிபல் சத்தத்துடன் 8 மணிநேரம் ஒருவர் இசையைக் கேட்டால் கண்டிப்பாக அவருடைய கேட்கும் சக்தியை இழந்து விடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புது வித யுக்திகளை கையாளும் திருடர்கள்

திருட்டு என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தொழில் என்றாலும் சில திருடர்களின் திருட்டு முயற்சிகளைப் பார்த்தால் வியப்பும் திகைப்பும் சில சமயங்களில் நகைப்பும் ஏற்படுகின்றன.


ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்த 2 திருடர்களின் கூட்டணி அடித்த கொள்ளை இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை

Muthupet-PFI
வரும் 2016ம் ஆண்டில் விண்ணை முட்டும் வகையிலான 800 அதி உயர கட்டடங்களை சீனா நிறுவும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என அந்நாட்டு நிபுணர்கள் அரசை வலியுறுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி.பி.ஐ ஆதரவுடன் பா.ஜ.க பஞ்.துணைத்தலைவரை தோற்கடித்த காங்.-முஸ்லிம் லீக்


மஞ்சேஷ்வரம்(கேரளா):பா.ஜ.கவை சார்ந்த பஞ்சாயத்து துணை தலைவரை சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்.டி.பி.ஐ) ஆதரவுடன் காங்.-முஸ்லீக் கூட்டணி தோற்கடித்தது.

கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டத்தில் மஞ்சேஷ்வரம் கிராம பஞ்சாயத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த துணை தலைவர் தேர்தலில்  பா.ஜ.கவை சார்ந்த ஹரிச்சந்திரனுக்கு மு.லீக் உறுப்பினர் ஒருவர் கட்சி மாறி வாக்களித்தார். மேலும் காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரிச்சந்திரன் பஞ்.துணை தலைவரானார்.

திருவாரூர் கலெக்டராக முனியநாதன் பொறுப்பேற்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கலெக்டராக முனியநாதன் நேற்று பொறுப்பேற்றார்.திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். 


நாகை மாவட்ட மாவட்ட கலெக்டராக இருந்த முனியநாதன் திருவாரூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற கலெக்டர் முனியநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் விவசாயம் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றபாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., தங்கவேல் உடனிருந்தார்

குஜராத் இனப்படுகொலை:போலீஸ் அதிகாரிகளுக்கு பங்குண்டு-முன்னாள் டி.ஜி.பி


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையில் மூத்த போலீஸ் அதிகார்களுக்கு பங்குண்டு என முன்னாள் டி.ஜி.பி ஆர்.என்.பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அசோசியேசன் கலவரம் நடக்கும்போது கூட்டம் நடத்தி போலீசார் அவர்களின் அரசியல்சட்ட ரீதியான கடமையை நிறைவேற்றவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதே இதற்கு ஆதாரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோலான்குன்றுகளை மீட்போம்-இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை


டமாஸ்கஸ்:இஸ்ரேலின் எல்லை பகுதியில் ராணுவ அணிவகுப்பு நடத்துவது தொடரும்.இஸ்ரேல் அபகரித்த கோலன் குன்றுகளின் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்பிவருவார்கள் என சிரியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1967-ஆம் ஆண்டு நடந்த போரின் நினைவுதினத்தில் கோலான் குன்றுக்கு வந்த ஃபலஸ்தீன், சிரியா குடிமக்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த போரில்தான் இஸ்ரேல் சிரியாவிற்கு சொந்தமான கோலான் குன்றுகளை அபகரித்தது. 

மரணத்தை பற்றி கவலையில்லை : லிபியாவின் பாதுகாப்பே எமது நோக்கம் : கடாபி


அமெரிக்க - மேற்குலக கூட்டுப்படைகளின் இராணுவ தாக்குதலை எதிர்த்து  தயார் எனவும் லிபிய ஜனாதிபதி மௌமர் கடாபி அறிவித்துள்ளார்.
இவ் அறிவித்தல் அடங்கிய புதிய பதிவு ஒன்றை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியுள்ளது. கடாபியின், 'பால் அல் அஸீசியா' இல்ல வளாகத்தில் நேட்டோ படைகள் குண்டுதாக்குதல் நடத்தியதை அடுத்து கடாபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் இவ்வீடியோ பதிவு ஒளிபரப்பட்டுள்ளது.

ராம்தேவ் ஓர் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் - ப.சிதம்பரம்


அன்னா   ஹசாரேயைப்போல் தானும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்ற ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

"கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் புத்தூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உச்சமன்றமான அகிலபாரத பிரதிநிதி சபா ஓர் கூட்டம் நடத்தியது. அதில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகளையும், தனிநபர்களையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2-ஆம் தேதி ஊழலுக்கு எதிரான முன்னணியை அமைப்பதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. பாபா ராம்தேவ் அதன் ஆதரவாளர். எனவே ராம்தேவின் இந்தச் செயலுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருக்கிறது" என தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

ஆயுத போராட்டதிற்கு அழைப்பு விடுக்கும் பயங்கரவாத சாமியார்!!


Muthupet PFI : மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். 

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். 

நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர். 

Wednesday, 8 June 2011

உணரப் படாத தீமை சினிமா...


Muthupet PFI : ‘நம் பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது. இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? இல்லையெனில்… மக்களைச் சுருள வைக்கும் திரைப்பட சுருளையெல்லாம் 
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’ சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.

எம்பிஏ மாணவர்களுக்கு வேலை வழங்குவதற்கு போட்டி தேர்வு:நிசான் அறிவிப்பு

Muthupet-PFI
சென்னை: எம்பிஏ மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் போட்டி தேர்வு ஒன்றை நிசான் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் தனது கார் பிராண்டை இந்தியாவில் பிரபலமடைய செய்யும் வகையில், புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்த வகையில், இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் படிக்கும் எம்பிஏ மாணவர்களுக்கான் போட்டி தேர்வை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

தவறான ஸ்கேன் ரிப்போர்ட்: ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

திருப்பூர்: தவறான ஸ்கேன் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டரும், அதன் அடிப்படையில் ஆலோசனை வழங்கிய ரேடியாலஜிஸ்ட்டும் சேர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பம்


திருப்பூர் பாளையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சத்யா. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பரில் சத்யா கர்ப்பமானர். சத்யா கர்ப்பம் தரித்த நாளிலிருந்து கணவர் விஜய் அவரை கண்ணை இமை காப்பது போல் பராமரித்தார்.


ஊழலுக்கு எதிரான இயக்கம் பாசிச சித்தாந்த்திலிருந்து விலகி நிற்க வேண்டும்-பாப்புலர் ப்ரண்ட்



Murhupet - PFI
போபால்:ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் சந்தேகத்திர்க்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களாலும் மேலும் பாசிச கூட்டத்தின் போலி முகங்களாலும் கைய்யாகபடுத்தப்படுவது குறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மக்களை எச்சரிக்கை செய்துள்ளது.
கேரளா கேலிக்கட்டில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டதாவது சந்தேகத்திர்க்குரிய முறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள பாபா ராம்தேவ் போன்றவர்கள் ஊழலுக்கு எதிரான போராளியாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது எதிர்மறையாக உள்ளது எனக் கூறியுள்ளது.


Tuesday, 7 June 2011

அரோரியா துப்பாக்கிச்சூடு - பீஹார் காவல்துறையின் வெறித்தனம்!


Muthupet PFI : பாட்னாபீஹார் மாநிலத்தில் காவல்துறையினர் கொடூரமான முறையில் நடந்து வருகிறார்கள். ஜனதா தளம் கட்சியின் முதல்வர் நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டும் சமீபத்தில் பீஹார் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள், அதே போன்று ஃபாஸிச பயங்கவரவாத கட்சியான பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நல்ல சிந்தனைகளா வரப்போகிறது? இந்த நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம்? முஸ்லிம்களை எப்படி கொன்று குவிக்கலாம்? என்ற சிந்தனை தான் வரும் என்ற அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான அராரியா மாவட்டத்தில் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை இரு வேறு சந்தர்பங்களில் அரங்கேற்றியுள்ளனர்.

பலஸ்தீனயர்களின் மரண சடங்குகளில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியது இஸ்ரேல்


Muthupet PFI : இஸ்ரேல் - சிரிய எல்லையில் கூடிய பாலஸ்தீனியர்களின் பேரணியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எவ்வித ஆயுதங்களமற்று நிராயுத பாணியாக இருந்த மக்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் பதுங்கியிருந்து நடத்திய இத்தாக்குதலின் அகோரத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி படம்பிடித்து வீடீயோ காட்சிகளாக வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வியாதி ஊழல் - எப்படி ஒழிப்பது? இளைஞர்கள் கேட்கின்றனர் - அப்துல் கலாம்


Muthupet PFI : நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசுகையில்;

விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது. 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

இது தான் இவர்களது ஊழலுக்கு எதிரான போரா(ஆ)ட்டம் !!!

Muthupet PFI :பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதியில் மதுபானம் விற்ற இலங்கையருக்குக் கடும்தண்டனை...


சவூதி அரேபியாவில் வசித்துவந்த இலங்கையர் ஒருவர் அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு சவூதி அராபிய நீதிமன்றம் ஐந்து தவணைகளில் 430 கசையடிகளும் ஐந்து வருட சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மதுபானம் அருந்துவதோ விற்பனை செய்வதோ முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இச்செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டு வருகிறது.

சுதந்திர தின அணிவகுப்புக்கான பயிற்சிகள்...


வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. தீண்டாமை இல்லாத இந்தியா, வகுப்பு வாதம் இல்லாத‌ ஊழல் இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து சமுதாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும்,

துபாயில் இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது


Emirates India Fraternity Forum (EIFF) நடத்தும்

Better Family! Better Society!!

இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி
நாள் : 10.06.2011 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை சரியாக 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம் : சென்ட்ரல் ஸ்கூல், NMC மருத்துவமனை அருகில், அல் கிஸைஸ், துபாய்

உரை தலைப்புகள் :

“நம்மை நாமே புனரமைப்போம்!”  -  சகோ.  வலசை ஃபைஸல்

“குடும்பத்தைப் புனரமைப்போம்!” –  சகோ.  எம்.எஸ். அப்துல் ஹமீது

“சமூகத்தைப் புனரமைப்போம்!”    -  சகோ.  செய்யது அலீ

நம்மை நாமே சுயமாய் அறிந்து…
குடும்பத்தின் குதூகலத்தில் மகிழ்ந்து…
சமூகத்தைப் புடம் போட்டிட…
சங்கமிப்போம் ஒன்றாய்…!

குடும்பத்துடன் பங்கேற்கலாம்.  பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க : 050 – 4265783
குறிப்பு : மிகச் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.

இப்படிக்கு,
செயலாளர்
Emirates Inida Fraternity Forum (EIFF)

கோவையில் காந்தி சிலை உடைப்பு: பாரதீய சேனா அமைப்பினர் இருவர் கைது...

கோவை: காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள காந்தி பூங்காவில், காந்தியடிகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப் பகுதி தனியே உடைந்து விழுந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு, ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இஸ்லாமிய உடையில் கால்பந்து ஆட ஈரான் மகளிர் அணிக்கு தடை


டெஹ்ரான்:இஸ்லாமிய உடையில் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள களமிறங்கிய மகளிர் அணியினருக்கு தடை விதித்த நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஃபிஃபாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப்போட்டி ஜோர்டானின் தலைநகர் அம்மானில் நடைபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஜோர்டான் அணிக்கு எதிராக ஆடுவதற்கு ஈரான் கால்பந்தாட்ட மகளிர் அணியினர் கண்ணியமிக்க இஸ்லாமிய ஆடையை அணிந்தவாறு களமிறங்கினர். அப்பொழுது போட்டியை நடத்தும் அதிகாரிகள் அவர்களுக்கு ஆடுவதற்கு தடை விதித்தனர்.

க்ரிமினல் குற்றவாளியான ராம்தேவின் உதவியாளர் தலைமறைவு


புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திய பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா நேபாளத்தில் க்ரிமினல் குற்றவாளியாவார்.இவர் தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்.

ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதப்போராட்டம் துவக்கிய நாளில் மாலை நான்குமணி அளவில் பாலகிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். உண்ணாவிரத போராட்டம் துவங்கி மாலையில் முடித்துக்கொள்வதாக ராம்தேவிற்காக மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியவர் பாலகிருஷ்ணா ஆவார்.

ராம்தேவ்: போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் மாடல் இனப்படுகொலைக்கு சதி திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்-திடுக்கிடும் தகவல்


புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் ராம்லீலா மைதான போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் கோத்ராவில் ரயில் எரிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக இனப்படு கொலை செய்தது போல் இனப்படு கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Monday, 6 June 2011

யார் இந்த தலிபான்?...


Muthupet PFI : காபூல் நகர மேயராக சுருங்கியுள்ள ஹமீத் கர்ஸாஈ 2001 இல் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தபோது அமெரிக்கக் காங்கிரஸின் தலையாட்டி பொம்மையாக நிலைநிறுத்தப்பட்டார். ஆப்கான் குண்டுகள், மனிதப் பிணங்கள் இரத்தக் கறைகள் படிந்த தேசமாகவே உடைத்து உருமாற்றப்படுகின்றது. தெற்காசியாவில் எழுச்சிபெறும் இஸ்லாமிய அலைகளை தடுத்து நிறுத்த 90 களில் சி.ஐ.ஏ. தீட்டிய திட்டமும் இன்றைய பயங்கரவாதத்திற்கெதிரான ஒபாமாவின் போரும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் எவ்விதத்திலும் வேறுபடவில்லை. வரலாறு நிச்சயம் இவர்களை மன்னிக்காது.