Wednesday, 3 August 2011

மகாத்மா காந்தி கொலை:ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு வக்காலத்து வாங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி – காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி:இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியை கொலைச்செய்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் குற்றவாளி அல்ல என முன்னாள் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வரலாற்று உண்மைகளை மறைத்து கெ.டி.தாமஸ் வெளியிட்ட அறிக்கையை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கண்டித்துள்ளார்.

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - 2011-12 பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.

RSS இயக்கத்தின் தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது!

புதுடெல்லி: அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் விரைவில் கைது செய்யப்படுவார்.

இவ்வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரி கையில் குண்டு வெடிப்பில் இந்திரேஷ் குமாரின் பங்கினைக்குறித்து குறிப்பிட்டிருந்தது. இதனைக் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என NIA நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘தீவிரவாதிகளாக இருந்தாலும் நல்லவர்கள்..’!!

பயணங்கள் எப்போதுமே அலாதியானவை. புதிய நபர்களின் சந்திப்பு, கலந்துரையாடல்கள் என புது அனுபவங்களை தருபவை. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பேருந்து பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. பேருந்தில் ஏறிய எனக்கு அருகில் அமர இடம் அளித்தார் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர்.

Tuesday, 2 August 2011

சோமாலியாவில் பஞ்சம், பட்டினி படு வேகமாகப் பரவுகிறது- ஐ.நா.

Famine spreads in Somaliaசோமாலியாவில் பஞ்சமும், பட்டினியும் படு வேகமாகப் பரவி வருவதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் வெலரி அமோஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலக நாடுகள் சோமாலியா விவகாரத்தில் உடனடியாக பெருமளவில்உதவிகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லாவிட்டால் சோமாலியாவின் சில பகுதிகளில் நிலவி வரும பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் நாடு முழுவதும் பரவி விட வாய்ப்புள்ளது.

சுப்பிரமணிய சாமி மீது மத துவேஷ வழக்கு-சிறுபான்மை கமிஷன் முடிவு

Subramaniam Swamyடெல்லி: தன்னை இந்துவாகக் கருதாத இஸ்லாமியர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது மதங்களுக்கு இடையே துவேஷத்தைப் பரப்புவதாக வழக்குப் பதிவு செய்ய தேசிய சிறுபான்மையினர் கமிஷன் முடிவு செய்துள்ளது.



போட்டோ சாப் இன் அடிப்படையை விரிவாக தமிழில் கற்றுக்கொள்வதற்கு - பயனுள்ள வலைப்பதிவு

போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன்.  போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.

1500 பேரின் படுகொலைக்கு காரணமான மாஃபியா நபர் மெக்ஸிகோவில் கைது

சுமார் 1,500 ற்கு மேற்பட்டோரின் படுகொலையுடன் தொடர்புடைய மெக்ஸிகோவின் பிரபல போதை பொருள் கடத்தல்காரரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரி கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் சஸ்பெண்ட்

Jaffer Saitசென்னை : லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் வலையில் சிக்கியுள்ள கூடுதல் டிஜிபி ஜாபர்சேட் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. அதன் முடிவில் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஷ்மீர் மக்களின் அவலம் : போலீஸ் காவலில் இளைஞர் படுகொலை

ஸ்ரீநகர்:வடக்கு கஷ்மீர் நகரமான ஸோப்பாரில் இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து மரணமடைந்தார். க்ரான்க்‌ஷிவன் என்ற பகுதியை சார்ந்த நாஸிம் ராஷித் என்ற அஞ்சும்(வயது 28) மரணமடைந்த இளைஞராவார். ஒரு வழக்கு தொடர்பாக நாஸிமை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர் சிறப்பு படையினர்.

Friday, 29 July 2011

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!


பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல்

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.  

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் காவல்துறையின் அராஜகம் - போ​லீஸ் உயர் அதிகாரியிட​ம் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுனருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து மிரட்டிவருகின்றனர். காவல்துறையினரின் இந்த அராஜகம் குறித்து அவரது மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சுதந்திரம் என்பது நமது உரிமை சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அறிக்கை

 

65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3-ஆண்டுகளாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி சிறப்பித்து வருகின்றது. இவ்வருடமும் ஆகஸ்ட் 15-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம்.

லோக்பால் மசோதா : சட்டமல்ல, கண்துடைப்பு!

கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

நாளை குரூப் 2 தேர்வு : தேர்வர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை

தருமபுரி, ஜூலை 28: குரூப்-2 தேர்வுக்கான மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆர். லில்லி கூறியது: 

ஆசிய நோபல் பரிசுகளை பெறும் இரு இந்தியர்கள்

ஆசியாவின் நோபல் பரிசுகள் என போற்றப்படுவது பிலிப்பைன்ஸின் ராமோன் மகசேசே விருதுகள். 2011 ற்கான ராமோன் மகசேசே விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 05 நபர்களில் இரு இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் இருப்பை மிஞ்சியது ஆப்பிள் நிறுவனம்

நியூயார்க்: அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம்.

உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.

லிபிய புரட்சிப்படை தளபதி படுகொலை


லிபிய புரட்சி படையின் தளபதி அப்டெல் ஃபட்டாஹ் யூனெஸ் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தேசிய புரட்சிப்படை கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரேய்ன் சுரங்க விபத்து : 16 பேர் பலி

உக்ரேயினில் நேற்றிரவு இடம்பெற்ற சுரங்க் விபத்தில் 16 பேர் பலியாகினர். கிழக்கு லுகான்ஸ்க் மாநிலத்தில், இவ்வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.
 இவ்விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

Thursday, 28 July 2011

உணர்வற்ற உணர்வு(!) இதழின் அவதூறும் - மறுப்பும்

சமுதாயத்தில் குழப்பம் செய்வதையும், சமுதாய தலைவர்கள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மீது அவதூறு சகதியை அள்ளி இறைப்பதை மட்டுமே தனது தொழிலாகக் கொண்டு வெளிவரும் சமூக, சமுதாய உணர்வற்ற உணர்வு(!) இதழ் தனது ஜுலை 15-21 இதழில் வழக்கம் போல் ஈனத்தனமாக ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க கடன் நெருக்கடி: உலக பொருளாதாரம் பாதிக்கும் - ஐஎம்எப் தலைவர்

வாஷிங்டன் : அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்' என, நேற்று முன்தினம் நியூயார்க்கில் பேசிய சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமச்சீர் கல்வி: ஆகஸ்ட் 5-க்குள் புத்தகங்களை வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : சமச்சீர் கல்வி பாடத்திட்டப் புத்தகங்களை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு இன்று உத்தரவிட்டது.

கர்நாடகா சுரங்க ஊழல் : ரெட்டி சகோதரர்களும் ராஜினாமா?

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவைத் தொடர்ந்து ரெட்டி சகோதரர்களும் அமைச்சரவையில் இருந்து விலகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

கர்நாடகவில் சுரங்க ஊழல் தொடர்பான லோக் ஆயுக்த விசரணை அறிக்கையில் முதலமைச்சர் எடியூரப்பாவின் பெயர் இடம்பெற்றதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

பாலஸ்தீன் : தடுத்து நிறுத்திய அதிகாரிகள் கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்

அமெரிக்காவை ஆட்டிப் படைக்கின்றன யூத சக்திகள் என்பது அமெரிக்க அரசியலை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூத சக்திகள் வலுவாகவே செல்வாக்கு செலுத்தி வருகின்றன என்பது பலருக்குத் தெரியாது. 

இதற்கு சமீபத்திய உதாரணம் தான் பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த சமூக ஆர்வலர்கள் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிலும் முதல்வரின் கவனம் திரும்பட்டும்

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டை துவக்கத்திலே எதிர்க்கத் துவங்கினர் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள்.

உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கடந்த 16-11-1992ல் வழங்கிய தீர்ப்பில், ஒரு மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தை விஞ்சக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

முஸ்லிம்களை ஏமாற்றும் மத்திய அரசு ஒரு அலசல்!


சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும். அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.
அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது.