Thursday, 23 June 2011

2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமா

Muthupet PFI -- 23/June/2011
ஆப்கானிஸ்தானில் இருந்து 2012ம் ஆண்டு கோடைகாலத்திற்கு முன்பாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொ‌றி‌யி‌ய‌ல் ரேங்க் பட்டியல் நாளை வெளி‌யீடு

பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான ரே‌ங்‌க் ப‌ட்டி‌யலை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம் நாளை வெ‌ளி‌யிட உ‌ள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 494 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிக‌ளி‌ல் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு வருடந்தோறும் அண்ணா பல்கலைக்கழகம் கல‌ந்தா‌ய்வு நடத்தி வருகிறது.

3 மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி.: முதல்வர் உறுதி

சென்னை, ஜூன் 22: தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.


உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பென்டகன் புதிய தலைவர் லியோன் பனெட்டா

அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் புதிய தலைவராக லியோன் பனெட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ-வின் தலைவர் பதவியை வகித்த இவரது நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

3 வருட கியாரண்டியுடன் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்-அரசு திட்டம்

சென்னை:  3 வருட உத்தரவாதத்துடன், தரமான லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழிலதிபர் மற்றும் ரத்னாகருக்கு சம்மன்!!

புட்டபர்த்தி: சாய்பாபாவின் தனி அறையிலிருந்த பல கோடி ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த நகைகள் ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பாபா அறக்கட்டளை உறுப்பினர்களே துணைபோயுள்ளனர்.



பாபாவின் பக்தர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்த சத்யசாய்பாபா கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து லாரி மூலம் விலை உயர்ந்த பரிசுபொருட்கள் மற்றும் பணம் கடத்திச் செல்லப்பட்டதாக பக்தர்கள் புகார் கூறினார்கள். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

லோக்பால் மசோதா தொடர்பாக ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லி: லோக்பால் மசோதா குறித்து ஜூலை 3ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள வரைவு மசோதா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து நீதி விசாரணை-அரசு உத்தரவு

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பான விசாரணை அறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

லிபியாவின் 9 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

Muthupet PFI -- 23/June/2011
லிபிய அதிபர் மோமர் கடாபியின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
விதித்துள்ளது.

லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார்.

மூன்றே மாதங்களில் மீண்டும் உயிர்தெழுந்த ஜப்பான்

கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி.


1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.

Wednesday, 22 June 2011

2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு

ஐ.நா.: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், உலக அளவில் கடும் சர்ச்சைக்குள்ளானவரான பான் கி மூன்.

இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.

துருக்கி - இஸ்லாமிய அரசியலை நோக்கி

தேர்தல் அரசியலில் பங்கேற்று இஸ்லாமிய அரசியலை நோக்கிய பயணத்திற்கான ஒரு நிகழ்கால உதாரணத்தைத் தருகிறேன்.


துருக்கி! நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் இஸ்லாமிய உலகின் தலைநகராக இருந்த நாடு. பின்னர் முஸ்தபா கமால் பாட்சா என்பவன் தலைமையில் அந்நாடு வந்தபின், இஸ்லாமிய அடையாளம் முழுமையாக அகற்றப்பட்டு, யூரோப்பிய நாகரீகத்தின்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ஜூலை 30ம் தேதி நடைபெறும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

மொத்தம் 4,329 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு வரும் 30ம் தேதி முதல் சென்னையில் கவுன்சிலிங்

சென்னை : "மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு பொது பிரிவு கவுன்சிலிங் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி துவங்கும். இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 66 பேர், அனைத்து முக்கிய பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறினார். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப்படிப்புகளுக்கு, 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக வளாகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் நேற்று மாலை வெளியிட்டார்.


உ.பி.,யில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு :மாநில அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

லக்னோ : உத்தர பிரதேசத்தில், கடந்த இரு நாட்களுக்குள், ஐந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் கொலையும் செய்யப்பட்ட கொடூர சம்பவங்களை அடுத்து, இப்பிரச்னையைத் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள மாநில மனித உரிமை கமிஷன், இதுகுறித்து, மாநில அரசுக்கும், போலீசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு

கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் கடல் நீர் மட்டம் தற்போது கடுமையாக அதிகரித்து வருகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரபல ஜேர்மனி பருவ நிலை விஞ்ஞானி இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு குறித்த கட்டுரை அமெரிக்க இதழான நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ் புத்தகத்தில் வெளியாகி உள்ளது.

நூற்றுக்கணக்கானோரால் சிதைக்கப்பட்ட கேரள மாணவி-முக்கிய தமிழக அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள்

நாகர்கோவில்: கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் பல முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


நூற்றுக்கும் மேற்பட்டோரால் இந்த சிறுமி சிதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல்

வாஷிங்டன், ஜூன்.22: தலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளைவிட இந்தியாவைத்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர்.



அல் காய்தா தலைவர் பின்லேடனை சமீப காலமாக யாரும் விரும்பவில்லை என்றாலும் அவரது மரணம் மோசமான ஒன்று என பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 14 சதவீதத்தினர் மட்டுமே அவரது மரணம் நல்ல விஷயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.


‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்?

அதிக‌ம் சா‌ப்‌பிடலா‌ம்!



அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.

சிறுபான்மையின மக்களை காக்க புதிய சட்டங்கள்

புது டெல்லி: கல்வி, வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்டவைகளில் சிறுபான்மையின மக்களிடம் காட்டப்படும் பாகுபாட்டிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலுக்கு கொண்டு வர அரசாங்கத்திடம் முன் மாதிரி பட்டியல் தயாராக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.


இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறுபான்மையின மக்களையும் அவர்களது உரிமைகளையும் காப்பதற்காக நிறுவப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து நடப்பவர்களுக்கு ஐந்து லட்சம் வரை அபராதமும், 3 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் ரகசிய கேமராக்கள்-மைக்ரோபோன்கள்: உளவு பார்க்கப்பட்டாரா பிரணாப் முகர்ஜி?

டெல்லி: தன்னுடைய அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொறுத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தியில், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்தார். அதில், எனது அலுவலகத்தை உளவு பார்க்க முயற்சி நடந்துள்ளது. 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு 2 வருட உத்தரவாதத்துடன் கூடிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் இலவசமாக வினியோகிக்கப்படவுள்ளன. இவற்றைத் தயாரித்து வழங்குவது குறித்து இவற்றின் தயாரிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.


தமிழகத்தி்ல் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தேர்தலில் வென்றவுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட லாரன் பூத்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமீன்.


இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.

லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்

புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் சுவாமி அஸிமானந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.




வெடிப்பொருட்களும், அதுத்தொடர்பான உபகரணங்களும் வாங்குவதற்காக இத்தொகை வழங்கப்பட்டது என குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியா அல்லது எம்பிக்கலின் வளர்ச்சிநிதியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதிலும், சில திட்டங்களின் மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


பழைய விதிகளின்படி 50 விழுக்காடு தொகை மட்டுமே முதல் தவணையாக அளிக்கப்பட்டு வந்தது. இப்போதைய புதிய மாற்றத்தின்படி, ஒரு திட்டம் ஏற்கப்படுமேயானால், அதற்கான மதிப்பீட்டில் 75 விழுக்காடு தொகை முதல் தவணையாக வழங்கப்படும். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் இத்திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்தவணையாக அதிகத் தொகை அளிக்கப்படுகிறது என்பதுதான்.


நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், அயர்லாந்து, போர்ச்சுகலுக்கு உதவ நிதியம்: ஐரோப்பிய யூனியன் முடிவு

பெர்லின் : நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவ 70 ஆயிரம் கோடி யூரோ நிதியம் ஏற்படுத்தும் திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இத் தொகைக்கென புதிய நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இஎஸ்எம் என்ற பெயரிலான இந்த நிதி உதவித் திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தவிருந்த 44,000 கோடி யூரோ நிதி உதவிக்கு மாற்றாக அமையும்.


தோல்வியில் முடிந்தது லோக்பால் கூட்டம்: ஹசாரே போராட்ட அறிவிப்பு

புது தில்லி, ஜூன் 21: முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் செவ்வாய்க்கிழமை தில்லியில் நடந்த லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.



அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னிச்சையான உயர் அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக 5 அமைச்சர்கள், 5 சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேசுவரம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனர்.



ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 20-ம் தேதி சுமார் 730 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்தப் படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜூன் 20-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த அம்புஜம், இருளாண்டி, பால்ராஜ், பொன்னழகு, ஞானசேகரன் ஆகியோருக்குச் சொந்தமான 5 படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து இலங்கை தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

Tuesday, 21 June 2011


ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள்

Muthupet PFI -- 21/06/2011
An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.


15 ஆண்டில் இல்லாத அதிகம்

உலகம் முழுவதும் 4.37 கோடி அகதிகள்

Muthupet PFI -- 21/June/2011
உலகம் முழுவதும் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா.வின் துணை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 80 சதவீதத்தினர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரக அலுவலகம் யு.என்.எச்.சி.ஆர். அதன் சார்பில் கடந்த ஆண்டு இறுதி வரை உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு நடந்தது. அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி

வடமேற்கு ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.



9 ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேருடன் வந்த டியூப்லெவ்-134 விமானம் பெட்ரோஜவாத்ஸ்க் நகருக்கு வெளியே பெஸோவெட்ஸ் விமானநிலையத்தில் ஓடுபாதையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சாலை அருகே மோதி தீப்பற்றியது.


சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம்


திருவாரூர் : சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற முனைவர் ஆர். தினகரன்


திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக முனைவர் ஆர். தினகரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த இவர் வேளாண் பட்டதாரி. வேளாண்மை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

+2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை


Muthupet PFI -- 20-June-2011
புதுடெல்லி:இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.


2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமச்சீர் கல்வி குறித்து ஆராய புதிய குழு: முதல்வர் ஜெயலலிதா

சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் நோக்கில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ராஜகம்பீரத்தில் இலவச நோட் மற்றும் புத்தகம் வழங்கும் விழா

ஸக்கரியா மாஸ்டர் டிரஸ்ட் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இணைந்து ராஜகம்பீரத்தில் சுமார் 50,000ரூபாய் அளவில் பணமும் மற்றும் நோட் புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.




தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!

JUNE 21, சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.




2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.


உபியில் இரண்டே நாட்களில் 5 பெண்கள் கற்பழிப்பு: பெண்கள் பீதி

இடா: உத்தரபிரதேசத்தில் 35 வயது விதவையை ஒரு கும்பல் கற்பழித்து, தீ வைத்துவிட்டு கொன்றுவி்ட்டு தப்பியோடிவிட்டது. மேலும் பிரோசாபாத் பகுதியில் 2 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் நடந்துள்ள 5-வது கற்பழிப்பாகும்.



உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தான் ராணிபூர் பெலாடி கிராமத்தில் ஒரு 18 வயது இளம் தலித் பெண் கற்பழிக்கப்பட்டார். அதே நாளில் 14 வயது பெண் ஒருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளது. போராடிய அப்பெண்ணைத் தாக்கி, கண்களை சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியது.


அமெரிக்க விமான விபத்தில் தமிழக டாக்டர் தம்பதி பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூளைப் புற்று நோய் நிபுணர் விஸ்வநாதன் ராஜாராமன், அவரது மனைவி உயிரிழந்தனர்.


காப்பி அடித்து ஆங்கில நாவல் ஒன்றை எழுதியதாக 2006ல் சர்ச்சையில் சிக்கிய நாவலாசிரியர் காவ்யாவின் பெற்றோர் இவர்கள்.

பி.இ. கலந்தாய்வு: ஜூலை 8-ல் தொடங்குகிறது

சென்னை: பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.


தொடர்ந்து 35 நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவலை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிட்டார்.


சமச்சீர் கல்வி தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

புது தில்லி: நீதிமன்ற உத்தரவை மீறி விட்டதாக தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் ஹரீஷ் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

சட்டம் மட்டுமே போதாது!

காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.


நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!

Muthupet PFI -- 20-June-2011

கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.



2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலில் பொதுமக்கள் பலி: நேட்டோ படைகள் மன்னிப்பு கோரியது

திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.


லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம் நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் படி மக்களுக்கு அதிபர் அழைப்பு

சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.


சிரியா அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

Thursday, 16 June 2011

ஆளில்லா விமானம் மூலம் ஏமனை தாக்க அமெரிக்கா திட்டம்!

வாஷிங்டன்: ஏமனில் உள்ள பொதுமக்கள் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது

Wednesday, 15 June 2011

பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்

ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரின் காஸா விஜயம்

கடந்த திங்கட்கிழமை (13.06.2011) ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஜெர்ஸி புஸெக் காஸா மக்களின் வாழ்வியல் நிலைமைகளை நேரில் கண்டறியுமுகமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.



ஐ.நா.வின் பலஸ்தீன் அகதிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் மையத்தின் கீழ் இயங்கும் செவிப் புலனற்றோர் சங்கத்தையும், காஸாவின் மேற்குப் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிக்கூடங்களையும் பார்வையிடுவதற்காக அவரின் விஜயம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூன் 13: எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:


ஜூன், ஜூலை 2011-ல் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இந்த சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜவாஹிருல்லா கைது வாரண்டு ரத்து

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.



வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறையான ஆவணங்களை காட்டாமல் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது 5 பேரும் ஆஜராக வில்லை.