Wednesday, 18 May 2011

மெரீனா கடற்கரையில் மாயமான 5 வயது சிறுமி கதி என்ன?; ஒருவாரம் ஆகியும் கிடைக்காததால் பெற்றோர் கண்ணீர்!!

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். இவரது மனைவி ஹசீனா. இவர்களது 5 வயது இரட்டை குழந்தைகள் தம்மன்னா, ரிகாத்.

கடந்த 11-ந்தேதி குழந்தைகளுடன் பெற்றோர் மெரீனா கடற்கரைக்கு சென்றனர். அங்கு உழைப்பாளர் சிலை அருகே சிறுமியும், சிறுவனும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி தம்மன்னா மாயமாகி விட்டாள்.

பெற்றோர் பதறியடித்தவாறு கடற்கரை முழுவதும் தேடினார்கள். அதன் பிறகு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிறுமி மாயமாகி ஒரு வாரம் ஆகியும் கதி என்ன என்று தெரியவில்லை. சிறுமியை யாராவது கடத்திச்சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி தம்மன்னா எல்.கே.ஜி. படித்தாள். அவளுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி மட்டுமே தெரியும். குழந்தையை காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.

அவர்கள் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 11-ந்தேதி சிறுமி தம்மன்னாவும், சிறுவன் ரிகாத்தும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் பஞ்சு மிட்டாய் வேண்டும் என்று கேட்டதால் காசு கொடுத்து இருவரையும் அனுப்பி வைத்தோம்.

சற்று தொலைவில் இருந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் இருவரும் சென்று வாங்கினார்கள். அப்போது காசு குறைவாக இருந்ததால் தம்மன்னா அங்கேயே நின்று கொண்டு ரிகாத்தை காசு வாங்கி வருமாறு அனுப்பி வைத்தாள்.

ரிகாத் திரும்ப சென்றபோது தம்மன்னாவை காணவில்லை என்று சொன்னான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அந்தப்பகுதி முழுவதும் தேடினோம். பஞ்சு மிட்டாய் வியாபாரியிடம் கேட்டோம். அவர் குழந்தையை கவனிக்கவில்லை என்று கூறி விட்டார்.

போலீசார் என் மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களும் தகவல் தெரிந்தால் 8056104888 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

நேட்டோ ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் படை மீது தாக்குதல் !




    ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஆப்கான் எல்லையை கடந்து பாகிஸ்தான் வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இரண்டு பாகிஸ்தான் எல்லை படைவீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இராணுவம் உடனடியான சந்திப்பு ஒன்றுக்கு நேட்டோ தரப்பை அழைத்துள்ளதுடன்  கடுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் நேட்டோ படைகளின் இரண்டு ஹெலிகொப்டர்கள் பாகிஸ்தான் வசறிஸ்தான் பகுதிக்குள் வழமை போன்று அத்துமீறியுள்ளது இதன் போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் ஹெலிகொப்டர்கள் நோக்கி சுடப்பட்டுள்ளது அந்த தாக்குதலுக்கு நேட்டோ ஹெலிகொப்டர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்க  விரிவாக
மற்றும் ஒரு செய்தி முதல் தாக்குதலை நேட்டோ ஹெலிகொப்டர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் வான்பரப்பில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக நேட்டோ ஹெலிகொப்டர்கள் பறந்ததாகவும் தெரிவிக்கின்றது, கடந்த திங்கள் கிழமையும் அமெரிக்க உளவு விமானங்கள் பாகிஸ்தான் மீது குண்டுகளை வீசியது இதன்போது 12 போராளிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வட வஜிரிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டும் நான்கு பேர் காயமடைந்தும் இருந்தனர் இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைகளின் விநியோக பாதையை தற்காலிகமாக மூடியது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சற்று சூடான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது கடந்த கிழமை பாகிஸ்தான் பாராளுமன்றம் அமெரிக்காவின் பாகிஸ்தான் மண்ணில் மீதான அறிவிக்கபடாத தாக்குதலை கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடரும் இந்த கருத்து முறுகலை தணிக்க ராஜதந்திரிகள் இரு நாடுகளுக்கிடையில் பறந்தனர் இந்த நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மக்களிடம் இந்த சம்பவங்கள் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகின்றது பாகிஸ்தான் எதிர் கட்சிகள் கடுமையான தமது எதிர்ப்பை காட்டி வருகின்றது முழுமையாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பாகிஸ்தான் நிர்வாகமும், இராணுவ தலைமையும் பாகிஸ்தான்  மக்களை திசை திருப்ப நாடகம் ஆடிவருவதாக விமர்சிக்கப்படுகின்றது.

50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கிடு வழங்கியது ஜாமியா மில்லியா

Jamia_Millia_Islamia
புதுடில்லி:சிறுபான்மையின கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் (JMI) நிர்வாகம்,வருகிற கல்வியாண்டு முதல் 50 சதவிகிதம் இடஒதுக்கிட்டை அனைத்து துறையிலும் இடஒதுக்கிடு வழங்க முடிவு செய்துள்ளது.
 இந்தியவிலேயே ஒரே சிறுபான்மை கல்வி நிறுவனமான ஜாமியா உள் இடஒதுக்கிடாக 10 சதவிகிதம் முஸ்லிம் பென்களுக்கும்,10 சதவிகிதம் முஸ்லிம் ஒ.பி.சி மற்றும் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
 பல்கலைகழகம் அனுப்பிய சுற்றறிகையில் 42 சதவிகிதம் பொதுவாகவும் மீதி 3 சதவிகிதம் உடல் ஊனமுற்றோருக்கும் வழங்கும். இதற்கு முன்னதாக 25 சதவிகிதம் ஜாமியா பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கொடுத்து கொண்டுள்ளதை தற்போது அதை 5 சதவிகிதமாக குறைத்துள்ளது.மேலும் 5 வருடம் அப்ப்ள்ளியிலேயே படித்து இருக்க வேண்டும்.
 ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்கள்,www.jamia.ac.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்து அவர்களுடைய பிரிவை நிரப்பி மறுபடியும் கொடுக்க வேண்டும் என பல்கலைகழக செய்தி தொடர்பாளார் தெரிவித்தார்.
 பிப் 22 சிறுபான்மை கல்வி நிறுவனம் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சிறுபான்மை பல்கலைகழகமாக அங்கீகரித்ததும் இவ் இடஒதுக்கிடு அமல் படுத்தபடுகிறது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை மூட இஸ்ரேல் சதிவலை

Al-aqsa-mosque01_cropped
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை, ஜெருசலத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும்,நடு நிசியில் தமது தூக்கத்தை கலைப்பதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளில் ஒரு குழுவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயை  விடுவிக்கும் வரை மஸ்ஜிதுல் அக்ஸாவை மூடவேண்டும் என்றும் தெரிவித்து வருவதாகவும் பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையில் இருந்து வரும் 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜெருசலத்தில் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதை கடந்தவர்களும் , விசேச அனுமதி பத்திரம் பெற்றவர்களும் மட்டும் அங்கு தொழுவதற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
 மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் தோண்டி வரும் சுரங்கத்தால் ஏற்கனவே மஸ்ஜிதுல் அக்ஸா வெடிப்பு எடுக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘அதானை’யும் தடை செய்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மூடிவிடும் ஆபத்தை தாம் எதிர்கொள்வதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேல் வெளிவரும் Haaretz என்ற பிரபல பத்திரிகை இஸ்ரேல் 140,000 பலஸ்தீனர்களின் குடியுரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1967 -1994 காலப் பகுதியில் பலஸ்தீனில் இருந்து வெளியேறி 6 வருடங்களுக்கு மேல் திரும்பி வராமல் தமது குடியுரிமையை புதுப்பிக்காத பலஸ்தீனர்கள் குடியுரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெருசலத்தில் 7ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு வெளியில் வசித்தவர்கள் ஜெருசலத்தில் மீண்டும் குடியேரும் உரிமையை இன்றும் இழந்து வருகின்றனர்.
 இவர்கள் திரும்பிவரும்போது அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு அராஜகம் இன்றும் தொடர்கின்றது என்பது குறிபிடத்தக்கது.

மன ஊனமில்லா மணமகன் தேவை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


மன ஊனமில்லா மணமகன் தேவை




‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)



வல்ல அல்லாஹ் மணமகளுக்கு மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல, நீ கொடுக்க வேண்டிய மஹரை பெண்ணான என்னிடம் கேட்க, நீ கேட்ட மஹரை கொடுக்க என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில் தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்த உன் தாயும், உன் சகோதரியும் பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்?  என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன் வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார் நீங்கள் தெளிவாக சொன்னால்தான் அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது

லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம், பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து ஒரு வருட விதவிதமான சீர், நகை பின் எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய? எத்தனை பேருக்கு பசியாற தருவிய? (சாப்பாட்டையே பார்க்காத மாதிரி) மனை உள்ளது வீட்டை கட்டி கொடுத்து விடுங்கள்!
(தற்பொழுது குடிசைதான் வீடாம்) என் குடும்ப சூழ்நிலையில் இந்த சம்பந்தம் அமையுமா?
மணமேடையில் அமருவோமா? என்று மனதுக்குள் அழ! என் தந்தையோ நோயின் வாசல்படியை தட்ட நானோ வீட்டின் நிலைப்படியில்! எத்தனையோ பேர் என்னை பெண் பார்த்து சென்ற பிறகும் இன்னும் முதிர் கன்னியாக உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை! ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்க வந்தவர்களில் சிலர் என் பையன் சிகப்பு பெண்தான் பார்க்க சொல்கிறான் பெண் கருப்புதான் இருந்தாலும் நாங்கள் கேட்பதை (வரதட்சனையை) தந்து விட்டால் என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்! பணம் படைத்தவர்களின் கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து கருப்பு நிற பெண்களை கடலில் தள்ளி விடலாமா?

பெண்ணை பெற்றவன் ஜமாத்தில் லட்டர் வாங்கி ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம் என்று முகம் தெரியா ஊரில் பள்ளியில் தொழுகை முடிந்தவுடன் பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது உதவி செய்யுங்கள் என்று துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன் கோபம் வரவில்லையா? என்ன செய்தாய் நீ? என் தாய் தந்தை மனம் கோணாமல் நடப்பேன் என்றாய்! இளைஞனே திருமணம் முடிக்கும் நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில் மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால் இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண பேச்சு வார்த்தையில் மட்டும் என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்! இளைஞனே உன் தெருவில் திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க நீயோ பணம் படைத்த வீட்டில் பெண்ணை தேட! அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு வேற வழி இல்லை என்று பிறமத பையனோடு ஓட! இப்பொழு வருகிறது உனக்கு கோபம் என் தெரு பெண்எப்படி ஓடலாம்! அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும் உன்னை போன்றவர்களும் காரணம் இல்லையா? முகமூடி திருடன் இரவில் திருடுகிறான் நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை! மறுமை பயமும் இல்லை உனக்கு! மணமகனே நான் உன்னிடம் கேட்கிறேன் நீ என்ன மஹர் தருவாய் எனக்கு - எதற்காக என்கிறாயா? உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும் உன் குடும்பத்திற்கும் சேவை செய்வதற்கும்! குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக! உன் பிள்ளையை பெற்று தந்தவுடன் நானும் தகப்பன் என்று பெருமிதம் அடைவதற்காக! என் தாய் தந்தையை என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை நான் வாழ்ந்த இடத்தையே விட்டு விட்டு நீ  காட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்? இளைஞர்களே! இன்னுமா உறக்கம்?  உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும் விழித்தெழுங்கள்! இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம் நாளை மஹ்ஷர் பெருவெளியில் இறுதி தீர்ப்பின் நாளின் அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வாய் தாய் தந்தையை கை காட்டுவாயா? முடியாது இளைஞர்களே! நீங்கள் மட்டும்தான் உங்களின் காரியத்திற்கு பதில் சொல்வீர்கள் வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும் இந்த வரதட்சனை என்னும் கொடுமையை அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்! இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.



இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! 

நன்றி: ஹார்பார் கிளை - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. 

Tuesday, 17 May 2011

உஸாமா:அமெரிக்காவின் தேர்தல் பிரச்சாரம்-ஈரான்




அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பாரக் ஒபாமா நடத்தும் பிரச்சாரம் தான் அல்காயிதா போராளி இயக்க தலைவர் உஸாமாவின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் கருத்து தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அல்ல உஸாமாவை கொலை செய்த சம்பவம்.

அடுத்த தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பதற்காக மட்டுமே இச்சம்பவம். உஸாமா கொலை செய்யப்படுவதற்கு பல காலத்திற்கு முன்பே உஸாமா அமெரிக்க ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தனக்கு துல்லியமான தகவல் கிடைத்தது என அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வாக்குகளை பெறவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் முன்பு அந்நிய நாடுகள் மீது தாக்குதலை தொடுத்தார்.

அங்கெல்லாம் 10 லட்சம் குழந்தைகளை கொலை செய்தார். அவருடைய வழிமுறையை தொடரும் ஒபாமா செய்வதும் அதே தந்திரம் தான். அநீதியின் அதிகார மையங்களெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கின்றன. கைப்பாவையான ஆட்சியாளர்களை மாற்றாமல் நீதியான உலக முறை மாறாது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரு காலக்கட்டத்தில் தகர்ந்து போகும். அதன் மூலம் உலகில் நீதி நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

பிஇ, எம்.பி.பி.எஸ். விண்ணப்ப வினியோகம் துவங்கியது: மையங்களில் குவியும் மாணவர்கள்

தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ஏராளமான மாணவர்கள் மையங்களுக்கு நேரில் வந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர்.


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் விண்ணப்பங்கள்


தமிழ்நாட்டில் மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இவற்றில் ஆயிரத்து 653 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கிறது. இது தவிர சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 635 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள தலா 150 இடங்களை 250-க உயர்த்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு கூடுதலாக 200 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பல் மருத்துவக் கல்லூரி சென்னையில் மட்டுமே உள்ளது. இங்கு 85 இடங்கள் உள்ளன. மேலும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 891 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர்.


புதிதாக 120 பொறியியல் கல்லூரிகள்:


பி.இ. , பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று அதிகாலையிலேயே துவங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.


இது குறித்து மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது,


வரும் கல்வியாண்டிற்கான பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வழங்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 5 இடங்களில் விண்ணப்ப வினியோகம் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதி்ல் 460 சுயநிதி கல்லூரிகளும் அடக்கம். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 8 ஆயிரத்து 172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 பொறியியல் கல்லூரிகள் தங்கள் பாடப்பிரிவுகளை அதிகரிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள க்லலூரிகளிலேயே 30 ஆயிரம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். மேலும், இந்த ஆண்டில் 120 புதிய கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதனால் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 472 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு புதிதாக 16 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 78 ஆயிரம் முதல் தலைமுறை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்களில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என்றார்.


ஒரே நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை


இந்நிலையில் நேற்று வினியோகம் துவங்கிய முதல் நாளே தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 744 பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 13 ஆயிரத்து 300 விற்றுள்ளது. கடந்த ஆண்டு முதல் நாளில் 63 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் தான் விற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 16 May 2011

மேற்குவங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் விபரம்



வேட்பாளர் பெயர்தொகுதியின் பெயர்பெற்ற வாக்குகள்நிலை
1தயீதுல் இஸ்லாம்பரம்பூர்37875
2பாபர் அலிலால்கோலா47783
3குருபோதா தாஸ்நபகராம்32984
4இஸ்லாம் மலித்தாநவோடா22814
5ஜாகிர் ஹூஸைன்ரகுணதங்கஜ்60933
6அஃபன் அலி சம்ஸர்கஞ்42564
7முஹம்மது ரகீம்ஸூதி25004







மொத்தம்26993

SDPI-க்கு அதிகரித்த வாக்குகள் கேரள அரசியலில் நிர்ணாயகம்


இரு பெரும் முன்னணிகளான UDF என்றழைக்கப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் LDF என்றழைக்கப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கு மத்தியில் தனித்து போட்டியிட்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி பெற்ற வாக்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் SDPI பெற்ற வாக்குகள் தேர்தல் முடிவுகளின் கதியை மாற்றியுள்ளது. கொல்லம், இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களின் பல தொகுதிகளில் புறக்கணிக்க முடியாத கட்சியாக SDPI மாறியுள்ளது.

கேரள மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நூலிழை பெரும்பானமையைத்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 72 தொகுதிகளைப் பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி. இடதுசாரி கூட்டணிக்கோ 68 இடங்கள் கிடைத்துள்ளன. ஆகையால் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்ற ஒவ்வொரு தொகுதியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி தோல்விகளைக் கொடுத்துவிட்டு இடதுசாரிகளின் மானம் காத்தது கோழிக்கோடு மாவட்டம். அம்மாவட்டத்திலுள்ள வடகரை சட்டமன்றத் தொகுதியில் SDPI பெற்ற வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் சோசியலிஸ்ட் ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட எம்.கே.பிரேம்நாத்திற்கு வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்ட வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த ஜனதாதளம் கட்சியின் சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், SDPI வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு SDPI வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கைக்குரிய தற்போதைய எம்.எல்.ஏவை களமிறக்கி சி.பி.எம் கடும் போட்டியை ஏற்படுத்திய கண்ணூர் மாவட்டத்தில் அழிக்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்தது SDPI பெற்ற வாக்குகளாகும். முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், SDPI வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் SDPI பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.

திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது SDPI ஆகும்.4 83 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். SDPI வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இரு முன்னணிகளுடன் தனித்துப் போட்டியிட்ட SDPI மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளுடன் ஊடகங்களால் உயர்த்திக்காட்டப்பட்ட பா.ஜ.கவை இத்தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய SDPI கேரள மாநிலத்தலைவரான நஸ்ருதீன் எழமரம் நான்காவது இடத்திற்கு தள்ளி 7,645 வாக்குகளை பெற்றுள்ளார்.

இடுக்கி மாவட்டம் தொடுபுழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட SDPI வேட்பாளர் பெற்ற வாக்குகள் கேரள அரசியலில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு போட்டியிட்ட SDPI-ன் எம்.எ.நஜீப் 5,386 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோதமங்கலம், குன்னத்துநாடு, கண்ணூர், மட்டனூர், பூத்தார், நாதாபுரம், கொண்டோட்டி, நிலம்பூர், மலப்புரம், வேங்கரா, மங்கடா, வள்ளிகுன்னு, பொன்னானி, தானூர், தவனூர், பட்டாம்பி, மானந்தவாடி, சொர்ணூர், ஆற்றிங்கல், வாமனபுரம், சேலக்கரை, குருவாயூர் ஆகிய தொகுதிகளிலும் இரண்டரை வருடம் கூட பூர்த்தியாகாத SDPI குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித்தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் தனித்துப்போட்டியிட்ட SDPI-க்கு கிடைத்துள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவிக்கிறார். மேலும் அதிக ஆர்வத்துடன் மக்கள் பிரச்சனைகளில் கட்சி தலையிட இவ்வாக்குகள் உதவும்.

Saturday, 14 May 2011

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்


14 May 2011



மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.



இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.



வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.



கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.



இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.



அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.



வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.



இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.



சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.



அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.




கெய்ரோவில் பலஸ்தீன் ஆதரவு பேரணி

egypt protest
கெய்ரோ:மேற்காசியா நாடுகளில் ஜும்ஆ தினத்தில் தொழுகைக்குப் பிறகு வலுப்பெரும் அரசுக்கு எதிரான பேரணிகளிலிருந்து வித்தியாசமான தினமாக அமைந்தது கெய்ரோவில் நேற்றைய வெள்ளிக்கிழமை. ஐக்கிய நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பலஸ்தீன் இயக்கங்களான ஹமாஸ் மற்றும் பத்ஹிற்கு கெய்ரோவின் விடுதலை சதுரங்கமான தஹ்ரீல் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை பிரகடனப்படுத்தினர். நேற்று முன்தினம் வகுப்பு மோதல்கள் நடைப்பெற்ற பகுதிகளிலிருந்து இப்பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் மனிதநேயத்தின் முன்மாதிரிகளாக மாறினார்கள்.
பலஸ்தீன் சகோதர, சகோதரிகளை அடக்கி ஒடுக்கி கொடுமைக்கு ஆளாக்கும் மனித குல விரோதியான இஸ்ரேலின் சியோனிச கொள்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் முபாரக் எதிர்ப்பு போராட்டத்தின் சின்னமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்தில் உச்சபட்ச குரலில் ஒலித்தன.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அடுத்த வாரம் காஸ்ஸாவிற்கு பேரணியாக செல்ல தன்னார்வ தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பேரணியை ரத்து செய்ய வேண்டுமென எகிப்தின் உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்து நாட்டு மக்கள் காஸ்ஸாவிற்கு பேரணியாக செல்ல உகந்த நேரமல்ல இது என ஹமாஸின் தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக்கோரி தொலைக்காட்சி தலைமையகத்தின் முன்னால் காப்டிக் கிறிஸ்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழகம்:மக்களின் கோபத்தால் தி.மு.கவுக்கு ஓய்வு

karunanidhi
சென்னை:தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் மீறி தி.மு.க மோசமான தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மக்கள் தி.மு.கவுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச, “காஸ்’ அடுப்பு, இலவச கான்கிரீட் வீடு திட்டம், பல்வேறு அரசு துறைகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மேம்பாலங்கள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் நடத்திய ஏகபோக ஆதிக்கம், அடிக்கடி மின்வெட்டு, விலைவாசி உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் ஆகியவற்றின் காரணமாக குப்புற கவிழ்ந்துவிட்டது.
இலவசங்களை அள்ளி வீசி, பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவதில் கவனம் செலுத்திய தி.மு.க அரசு மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைக்கு உரிய முடிவுகளை மேற்கொள்ளாததன் காரணமாக பலத்த அடியை இந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மின்வெட்டினால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டது. விஷம் போல ஏறிய விலைவாசியை கட்டுப்படுத்தவும் தன்னால் இயன்ற முயற்சிகளை கலைஞரின் அரசு செய்யவில்லை. இவையெல்லாம் தி.மு.கவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி 204 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. தனிப்பட்ட ரீதியாக 150 தொகுதிகளை கைப்பற்றி சட்டசபையில் தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளது அ.இ.அ.தி.மு.க.
அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 28 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி, பார்வார்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளன. 234 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணிக்கு 30 இடங்களே கிடைத்துள்ளன. தி.மு.க 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பா.ம.க 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 193 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
பெருவாரியான வாக்குகளை அளித்து தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க-வும் ஏதோ புனிதமான கட்சியல்ல. மக்களுக்கு மாற்று வழி இல்லாததால் தங்களின் கோபதாபத்தை எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க-வுக்கு வாக்குகளால் அளித்து தீர்த்துக்கொண்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில் அ.இ.அ.தி.மு.க-வின் கடந்தகாலம் சர்வாதிகாரமும், பாசிச தொடர்பும்,ஊழலும், மக்கள் விரோத கொள்கைகளாலுமே நிறைந்துள்ளது.
எவ்வளவு தூரம் மக்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவார், தற்போதைய மின்வெட்டு, விலைவாசி பிரச்சனைகளை சமாளிப்பார் என்பது போகபோகத்தான் தெரியும். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை செல்வி.ஜெயலலிதா எடுக்காவிட்டால் வாக்களித்த பலனை தமிழக வாக்காளர்கள் வருகிற 5 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.

மாற்று அரசியலுக்கான உதயத்திற்கு வழிகோலும் தேர்தல் முடிவுகள்:இ.அபூபக்கர்

abubacker
புதுடெல்லி:கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் மாற்று அரசியலுக்கான புதிய விடியலை சுட்டிக்காட்டுவதாக சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வழக்கமான முறைக்கு மாற்றமாக நுண்ணிய பெரும்பான்மையை மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கேரள மக்கள் வழங்கியுள்ளனர்.
கேரளத்தை தவிர மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஆளுங்கட்சிக்கு எதிரான உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், வழக்கமான முறைக்கு மாற்றமான நிலைப்பாடு ஒன்றும் இத்தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. ஊழலில் மூழ்கிய ஆளுங்கட்சியை தோல்வியடைய செய்ய இக்காரியத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லாத எதிர்கட்சி கூட்டணியை வெற்றிப் பெறச்செய்யும் நிலைப்பாட்டைத்தான் இத்தேர்தலில் மக்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதற்கு காரணம் மக்களுக்கு முன்னால் வேறு வழிகள் இல்லாதது தான்.
மாற்று அரசியலின் அத்தியாவசிய தேவையை இத்தேர்தல் முடிவுகள் கட்டியங்கூறுகிறது. மேற்கு வங்காளத்தில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்ததன் விளைவே மம்தா பானர்ஜியின் வெற்றியாகும். எந்தவொரு கட்சியுடன் கூட்டணி சேராமல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெகுசிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
போட்டியிட்ட 101 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற அவர்களால் முடிந்துள்ளது. சில இடங்களில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக மாறியுள்ளன. சட்டமன்றத் தேர்தல்களில் முதல் பரிசோதனை என்ற நிலையில் எஸ்.டி.பி.ஐ இது அளிக்கும் தன்னம்பிக்கை சிறியதல்ல. மாற்று அரசியலுக்கான முயற்சிகளை எஸ்.டி.பி.ஐ தொடரும். இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐக்கு அதிகரித்த வாக்குகள் கேரள அரசியலில் நிர்ணாயகம்

sdpi
திருவனந்தபுரம்:இரு பெரும் முன்னணிகளான யு.டி.எஃப் என்றழைக்கப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் எல்.டி.எஃப் என்றழைக்கப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கு மத்தியில் தனித்து போட்டியிட்ட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி பெற்ற வாக்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் சில தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் தேர்தல் முடிவுகளின் கதியை மாற்றியுள்ளது. கொல்லம், இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களின் பல தொகுதிகளில் புறக்கணிக்க முடியாத கட்சியாக எஸ்.டி.பி.ஐ மாறியுள்ளது.
கேரள மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நூலிழை பெரும்பானமையைத்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 72 தொகுதிகளைப் பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி. இடதுசாரி கூட்டணிக்கோ 68 இடங்கள் கிடைத்துள்ளன. ஆகையால் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்ற ஒவ்வொரு தொகுதியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி தோல்விகளைக் கொடுத்துவிட்டு இடதுசாரிகளின் மானம் காத்தது கோழிக்கோடு மாவட்டம். அம்மாவட்டத்திலுள்ள வடகரை சட்டமன்றத் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் சோசியலிஸ்ட் ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட எம்.கே.பிரேம்நாத்திற்கு வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்ட வடகரை தொகுதியில் இடதுசாரி கூட்டணியை சார்ந்த ஜனதாதளம் கட்சியின் சி.கே.நாணு 847 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸலீம் அழியூர் பெற்ற வாக்குகளோ 3.488 ஆகும். காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் தடையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கைக்குரிய தற்போதைய எம்.எல்.ஏவை களமிறக்கி சி.பி.எம் கடும் போட்டியை ஏற்படுத்திய கண்ணூர் மாவட்டத்தில் அழிக்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்தது எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகளாகும். முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவைச்சார்ந்த கே.எம்.ஷாஜி 483 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிப்பெற்றார். ஆனால், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நவ்ஷாத் பெற்ற வாக்குகளோ 2,935 ஆகும். இத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் இடதுசாரிகளின் வெற்றியை பாதித்தது.
திருச்சூர் மாவட்டம் மணலூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பேபி ஜானின் தோல்வியில் நிர்ணாயக பங்குவகித்தது எஸ்.டி.பி.ஐ ஆகும்.4 83 வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற்றார். எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பி.கே.உஸ்மான் பெற்ற 2,293 வாக்குகள் இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இரு முன்னணிகளுடன் தனித்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகளுடன் ஊடகங்களால் உயர்த்திக்காட்டப்பட்ட பா.ஜ.கவை இத்தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய எஸ்.டி.பி.ஐ கேரள மாநிலத்தலைவரான நாஸருத்தீன் எழமரம் நான்காவது இடத்திற்கு தள்ளி 7,645 வாக்குகளை பெற்றுள்ளார்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பெற்ற வாக்குகள் கேரள அரசியலில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐயின் எம்.எ.நஜீப் 5,386 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோதமங்கலம், குன்னத்துநாடு, கண்ணூர், மட்டனூர், பூத்தார், நாதாபுரம், கொண்டோட்டி, நிலம்பூர், மலப்புரம், வேங்கரா, மங்கடா, வள்ளிகுன்னு, பொன்னானி, தானூர், தவனூர், பட்டாம்பி, மானந்தவாடி, சொர்ணூர், ஆற்றிங்கல், வாமனபுரம், சேலக்கரை, குருவாயூர் ஆகிய தொகுதிகளிலும் இரண்டரை வருடம் கூட பூர்த்தியாகாத எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித்தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் தனித்துப்போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு கிடைத்துள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவிக்கிறார். மேலும் அதிக ஆர்வத்துடன் மக்கள் பிரச்சனைகளில் கட்சி தலையிட இவ்வாக்குகள் உதவும்.

Thursday, 12 May 2011

நஸ்ருதீன் இளமரம் – கேரள மாநில எஸ்.டி.பி.ஐ தலைவராக தேர்வு

Nasruddin
கோழிக்கோடு:சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத் தலைவராக நஸ்ருதீன் எழமரம் கோழிக்கோட்டில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் நடந்த தேர்தலில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் நாஸருத்தீன் கட்சியின் மாநில தலைமைச்செயலக உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். தனிப்பட்ட காரணங்களால் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா தேர்தலை நடத்தினார்.
இத்தேர்தலுக்கு தலைவர் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர்களான எம்.கே.மனோஜ்குமார், அப்துல்மஜீத் ஃபைஸி, துணைத் தலைவர்களான முவாற்றுப்புழா மெளலவி அஷ்ரஃப், அய்யப்பன் மாஸ்டர், பொருளாளர் சேம்குட்டி ஜேக்கப், வி.டி.இக்ராமுல் ஹக், நூர்ஜஹான், துளசீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.